என் பையனுக்கு 21 வயசாகுது அவனுக்கே ஜாதகம் இன்னும் எழுதல – 90ஸ் கிட்ஸ்களின் ஜோதிட Vjவா இது

0
1170
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் காலையில் தினமும் இவரது குரலை கேட்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ராசியான நிறம், அனுகூலமான திசை என்று அணைத்து ராசிகளின் நேரத்தை தினமும் புட்டு புட்டு வைத்தவர் வி ஜே விஷால். சன் டிவியில் ‘ஜோதிடபலன்’ நிகழ்ச்சியைப் பல வருஷங்களாகத் தொகுத்து வழங்கியவர் வீஜே விஷால். ஐ.டி வேலை பார்த்துக்கொண்டு, பகுதி நேரமாக மீடியாவில் வலம் வந்தவர். அவருடைய பணியின் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜோதிடபலன்’ நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.

-விளம்பரம்-

சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள இவர், வேலையின் காரணமாக லண்டனில் மூன்று வருஷம் இருக்க வேண்டியதாக இருந்தது. லண்டனில் இருந்து வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைமாக ஆங்கரிங் பண்ணலாம்னு டெஸ்ட் ஷூட் போயிருந்தேன். இப்போ வரை எந்த ரிசல்ட்டும் வரலை. மீடியா எனக்கு அதிகமாக ஃபேம் கொடுத்துச்சு. ஐ.டி கம்பெனி எனக்கான வளர்ச்சியைக் கொடுத்துச்சு. பல விஷயங்கள் கத்துக்கிட்டேன்.

- Advertisement -

விஜே விஷால் அளித்த பேட்டி:

எதுக்காகவும், யாருக்காகவும் என் ஐ.டி வேலையை விடக்கூடாது, விட மாட்டேன் என்பது என்னுடைய எண்ணம். இப்பவும் பல இடங்களில் என்னைப் பார்க்கிற என் ரசிகர்கள் ஆசையா விசாரிக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று கூறி இருந்தார்..இந்த நிலையில் வி ஜே விஷால் சுந்தர் அவர்கள் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் youtube சேனலுக்கு விஜே விஷால் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் மீண்டும் மீடியா துறைக்கு வர ஆசைப்படுகிறேன்.

ஜோதிடம் குறித்து சொன்னது:

எனக்கு பிடித்த வேலை செய்யும் போது எல்லாமே நன்றாக தான் இருக்கு. ஜோசியம் நான் வாசித்தாலும் ஜோசியத்தை நம்பி நான் என்ன வாழ்க்கையை நடக்க மாட்டேன். என்னுடைய மகனுக்கு 21 வயதாகிறது. அவனுக்கே நான் இன்னும் ஜாதகம் கணிக்கவில்லை. எங்களுக்கு ஜோசியர் எழுதிக் கொடுத்ததை நான் அப்படியே படித்தேன். அவருடையது சரியானது மற்றும் நல்ல ஜோசியம் தான். என்னுடைய ராசி துலாம். ஜோதிடமிருந்து ஸ்கிரிப்ட் வந்து விட்டால் உடனே நானும் என்னுடைய உடயை என் ராசிக்கு ஏற்ற நேரத்தில் மாற்றிக் கொள்வேன்.

-விளம்பரம்-

மீண்டும் என்டரி கொடுக்கும் விஜே விஷால்:

திருமணம் செய்து கொண்டால் அவர்கள் மீடியா வேண்டாம் என்று சொல்லிவிட்டால் கேரியே வீணாகிவிடும் படித்த எம்பிஏ படிப்பும் வீணாகிவிடும் என்று நினைத்து ஐடித்துறையில் வேலை செய்து கொண்டு இந்த வேலையை பார்த்தேன். நான் மீடியாவில் இருக்கும் போது ரகுவரன் சாருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. எனக்கு நடிக்க விருப்பமில்லை என்று தெரிந்தவுடன் யாருமே வாய்ப்பு கேட்கவில்லை. தற்போது நான் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க விரும்புகிறேன். இனி சீரியல் அல்லது சினிமாவில் என்னை பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார். சமீபத்தில் தான் பெப்சி உமா மீண்டும் சின்னத்திரையில் என்டரி ஆக இருப்பதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

Advertisement