ஒரு படம் எடுத்துட்டு ஏன்டா ஓவரா ஆடுறீங்க? ஆவேசமாக பேசிய இயக்குனர் சுந்தர் சி – இது தான் காரணம்

0
515
sundarc
- Advertisement -

ஆவேசமாக இயக்குநர் சுந்தர் சி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் தற்போது நடிகர்களாக ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் சுந்தர் சியும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இவர் உதவி இயக்குனராக தான் பணியாற்றி இருந்தார். இவரை நடிகராக அறிமுகம் செய்து வைத்தது மணிவண்ணன் தான். அதோடு சுந்தர்.சி இயக்குநராவதற்கு முன்பு சத்யராஜின் ‘வாழ்க்கைச் சக்கரம்’ என்ற படத்தில் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை மணிவண்ணன் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 1995-ஆம் ஆண்டு வெளி வந்த முறை மாமன் படத்தின் மூலம் சுந்தர்.சி இயக்குனர் ஆனார். இதில் சுந்தர் சி ஒரு காட்சியில் நடித்து இருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகி ராமன், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத் தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அன்பே சிவம், வின்னர்,

இதையும் பாருங்க : சிறு வயதில் கேப்டன் ஓடி ஆடிய விளையாடிய சாலை, பூர்வீக வீடு, குலா சாமி கோவில் – இதுவரை நீங்கள் பார்க்காத அறிய வீடியோ இதோ.

- Advertisement -

சுந்தர் சி திரைப்பயணம்:

கிரி, லண்டன், சின்னா, இரண்டு, கலகலப்பு 1 & 2, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, வந்தா ராஜாவா தான் வருவேன் என அடுத்தடுத்து பல தமிழ் படங்களை இயக்கி இருந்தார் சுந்தர்.சி. மேலும், தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். 2006-ஆம் ஆண்டு வெளி வந்த ‘தலைநகரம்’ படத்தின் மூலம் இவர் ஹீரோ ஆனார். பிரபல இயக்குநர் சுராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ‘வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள்,

சுந்தர் சி நடிக்கும் படம்:

தீ, இருட்டு’ போன்ற பல படங்களில் நடித்தார் சுந்தர்.சி. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆனால், சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்து இருந்த ஆக்சன், அரண்மனை 3 திரைப்படங்கள் படுதோல்வியைச் சந்தித்திருந்தது. தற்போது சுந்தர் சி ஹீரோவாக அறிமுகமான தலைநகரம் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. கலகலப்பு 2 வெற்றியை தொடர்ந்து தற்போது இவர் இயக்கத்தில் மீண்டும் ஒரு நகைச்சுவை திரைப்படம் தயாராகி வருகிறது.

-விளம்பரம்-

சுந்தர் சி இயக்கும் படம்:

இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா மேனன், ரைசா வில்சன், அமிர்தா ஐயர், தொகுப்பாளினி டிடி, யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சுந்தர் சி அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, சில இயக்குனர்களை பார்க்கும்போது வயித்து எரிச்சலாக இருக்கிறது. நம்ம இயக்குனர்கள் மைண்ட் வாய்ஸ் யூஸ் பண்ணுவதை பார்த்தால் வாந்தி வர மாதிரி இருக்கு. கதவை திறந்தால் ஹீரோயினின் நிற்பாள் அவள் கிட்ட லவ் சொன்னால் ஒத்து பார்களா? என்ற மைண்ட் வாய்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கு.

சுந்தர் சி ஆவேசமாக பேச காரணம்:

அது எல்லாம் பார்க்கும்போது ரொம்ப வயித்தெரிச்சலா இருக்கும். ஏன் இப்படியெல்லாம் மைண்ட் வாய்ஸ் யூஸ் பண்ணி பண்றீங்கன்னு கேட்க தோணுது? என்று இயக்குனர் சுந்தர் சி ஏதோ ஒரு இயக்குனரை தாக்கி ஆவேசமாக பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் எந்த இயக்குனரை பார்த்தால்? உங்களுக்கு இப்படி எல்லாம் தோன்றுகிறது என்று கமென்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement