இதனால் தான் வாபஸ் வாங்கினேன் – இரண்டாம் கணவர் மீது மீண்டும் புகார் கொடுத்த சுந்த்ரா ட்ராவல்ஸ் பட நடிகை.

0
1479
radha
- Advertisement -

தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, மணிவண்ணன், வினுசக்ரவர்த்தி போன்ற பலர் நடிப்பில் வெளியான ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதா. சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படத்தில் நடித்த இவர் அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து இருந்தார். நடிகை ராதா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார். திருமணமாகி சில வருடங்களில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவகாரத்து செய்துவிட்டார்.

-விளம்பரம்-

முதல் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்துள்ள ராதாவிற்கு, எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வரும் வசந்த ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வசந்தனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இந்த நிலையில் நடிகை ராதா உடன் ஏற்பட்ட காதலால் வசந்தராஜன் ராஜாவும் திருமணம் செய்து கொண்டனர்.இப்படி ஒரு நிலையில் தன்னுடைய இரண்டாவது கணவர் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாகவும் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாகவும் கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ராதா புகார் அளித்திருந்தார்.

இதையும் பாருங்க : நான் ஒரு மணி நேரத்துக்கே இங்க இத்தனை லட்சம் வாங்குறேன் – லீக்கான ரவுடி பேபி, இலக்கியாவின் விபச்சார பேரம்.

- Advertisement -

நடிகை ராதா அளித்த புகாரின் பேரில் வசந்தராஜனிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகை ராதா, வசந்தராஜன் மீது தான் அளித்த புகாரை திடீரென வாபஸ் பெற்றார். தன்னுடைய கணவர் மனம் திருந்தி தன்னிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதாகவும் அதனால் புகாரை வாபஸ் வருவதாகவும் நடிகை ராதா தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் வசந்தராஜா தன்னை கொடுமைபடுத்துவதாக புகார் கொடுத்துள்ளார்.

புகார் அளித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து கண்ணீருடன் பேசிய ராதா, கடந்த மே மாதம் வசந்தராஜா மீது புகார் கொடுத்தேன். ஆனால், அப்போது அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.  உதவி ஆய்வாளர் பாரதி என்னையும் வசந்தராஜாவையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார். இனிமேல் ஒன்றாக இணைந்து வாழ்வதாக கூறி வசந்தராஜா எழுதி கொடுத்தார்.ஆனால் தற்போது மீண்டும் என்னை கொடுமைப்படுத்துகிறார்.

-விளம்பரம்-

உதவி ஆய்வாளர்கள் பாரதியும், இளம்பரிதியும் என்னுடைய ஆட்கள். உன்னால் ஒன்றும் செய்யமுடியாது  என்று எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார். 500 ரூபாயும் போதும் கன்னி நகர்ல இருக்கும் சின்ன சின்ன பசங்கள வச்சி உன்னை அறுத்து போட்டு விடுவேன் என்றும் என்னை மிரட்டுகிறார். வசந்த ராஜா மீதும், சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளர்கள் பாரதி, இளம்பரிதி மீது காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement