நேரடியாக இறுதி போட்டிக்கு சென்ற நபர், இந்த ரெண்டு பேர் செமி பைனளுக்கு தேர்வு – யார் எலிமினேஷன் தெரியுமா ?

0
4220
super
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கியது.பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து யாராவது திறமையான பாடகர்கள் வெளியேறினால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அதேபோல இதுவரை நடந்து முடிந்த பல்வேறு சூப்பர் சிங்கர் சீசன்களின் டைட்டில்களை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து தான் வருகிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.ஸ்ரீதர் சேனா இறுதிச் சுற்றுவரை வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக தான் அமைந்திருந்தது.

இதையும் பாருங்க : மேடம், நீங்கள் பிராமின் தானே ? அண்ணாமலையை கேலி செய்ததால் ரசிகர் போட்ட கமன்ட் – நடிகை கொடுத்த செருப்படி பதில்.

- Advertisement -

இதனால் சூப்பர் சிங்கர் நடுவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து கடந்த வாரம் அய்யனார் வெளியேற்றப்பட்டு இருந்தார். இந்த அபிலாஷ், மானஸி மற்றும் பரத் ஆகிய மூவர் டேஞ்சர் சோனில் இருந்த நிலையில் இந்த வாரம் மானஸி வெளியேற்றப்பட்டவராக அறிவிக்கப்பட்டார்.

அதே போல ஆதித்யா மற்றும் அனு ஆகிய இருவரும் செமி பைனலுக்கு முன்னேறியுள்ள நிலையில் முத்து சிற்பி நேரடியாக பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்கம் போல இந்த எலிமினேஷனும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆதித்யா எப்படி செமி பைனல் வரை வந்தார் என்று பலர் புலம்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement