கொலைக்குற நாய்ங்கள பத்தி கவலை படாதீங்க சார் – பென்னிக்கு ஆறுதல் சொன்ன சூப்பர் சிங்கர் போட்டியாளர்

0
19750
benny
- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளின் இனி பங்குபெற மாட்டேன் என்று பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், எஸ்.பி.பி.சரண், பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-32.jpg

பின்னணி பாடகரான பென்னி தயாள், சூப்பர் சிங்கரின் ஒரு சில சீசன்களின் நடுவராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், இனிமேல் சூப்பர் சிங்கர் சம்பந்தமாக எதையும் நான் பதிவிட மாட்டேன் என்னை திட்டி தீர்த்து வரும் மெசேஜ்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது நீங்கள் என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி நானும் சாதாரண மனிதன் தான் என்னால் முடியவில்லை நன்றி அடுத்த சீசனிலும் உங்களை சந்திக்க மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : முகமூடி படத்தப்ப எப்படி வந்தார், இப்போ என்னடான்னா – பூஜா ஹேக்டே பந்தாவால் புலம்பிய இயக்குனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் பலரும் பென்னி தயாளின் இந்த பதிவை கண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் போட்டியாளரான குரு, இதுபோன்ற குலைக்கும் நாய்களைப் பற்றி எல்லாம் கவலைப் படாதீர்கள். அவர்கள் குலைத்துக் கொண்டே இருக்கட்டும், அது மட்டும் தான் அவர்களால் சரியாக செய்ய முடியும். நாங்கள் எப்போதும் உங்களை நேசிக்கின்றோம் என்று பதிவிட்டிருக்கிறார்.

பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து யாராவது திறமையான பாடகர்கள் வெளியேறினால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அதேபோல இதுவரை நடந்து முடிந்த பல்வேறு சூப்பர் சிங்கர் சீசன்களின் டைட்டில்களை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து தான் வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

ஸ்ரீதர் சேனா இறுதிச் சுற்றுவரை வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக தான் அமைந்திருந்தது ஸ்ரீதர் வெளியே ஏறியதில் இருந்தே இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள் எனவே ரசிகர்களின் வசை பாட்டை தாங்க முடியாமல் தான் பென்னி தயால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement