நான் குடிக்கும் முதல் பீர். சூப்பர் சிங்கர் பிரகதி பதிவிட்ட புகைப்படம். திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
161603
pragathi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வரும் இரண்டு விதமான நிகழ்ச்சிகளிக்கும் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் பிரகதி. 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த பிரகதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் வளர்ந்தார் அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடிய கிரகத்தை தொலைக்காட்சியில் கடந்த 2012ம் ஆண்டு ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மேலும் இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசையும் பெற்றார் பிரகதி.

-விளம்பரம்-

சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் சிறு வயது முதலே சங்கீதத்தை கற்று வந்தார். பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும், பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை ‘ படத்தில் ஒரு கதாபத்திரத்திலும் நடித்திருந்தார் பிரகதி.

இதையும் பாருங்க : விருமாண்டி பட நடிகை அபிராமியா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

- Advertisement -

அந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இவரை முன்னணி கதாநாயகியாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் சில தகவல்கள் வெளியானது ஆனால் அந்த படத்தை பற்றிய அறிவிப்பு அப்படியே நின்றுபோனது இருப்பினும் பிரகதி தொடர்ந்து சினிமாவில் பாடி வருகிறார் இதுவரை தமிழில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் பிரகதி. மேலும், தமிழில் அனிருத், ஜி வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுளளார் பிரகதி.

இந்தநிலையில் பிரகதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பீர் குடிப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தில் நான் பருகும் முதல் பீர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் இதுபோன்ற பழக்கம் வேண்டாம் என்றும் குடிப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம் ஆனால் அதனை இப்படி பப்ளிக்காக போடாதீர்கள் என்றும் அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்த புகைப்படத்தை கண்ட கழகத்தின் ரசிகர்களும் மிகவும் அடைந்துள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement