தனது இனிமையான குரலால் பழைய பாடல்களையும், நாட்டுப்புற பாடல்களை பாடி வரும் ரமணி பாட் டிக்கு ராக்ஸ்டார் ரமணி என்று பட்டமெல்லாம் அளிக்கப்பட்டுள்ளது.முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் இவர் பாடும் பாடல்களை கேட்ட பல சினிமா பாடகர்கள் இவரை பாரட்டியுள்ளானர்.
சமீபத்தில் கூட பட்டி காடா பட்டணமா என்ற படத்திலிருந்து அடி என்னடி ராக்கம்மா என்ற புகழ்பெற்ற பாடலை பாடினார்,அப்போது அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த பழம் பெரும் பாடகி பி. சுசீலா ரமணியம்மாளின் குரல் வளத்தை கேட்டு மிகவும் அச்சர்யப்பட்டர்.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே ரமணிஅம்மாள் பல படங்களில் பாடியுள்ளார்.இவர் தமிழில் வெளிவந்த பரத் நடித்த காதல், ஜீவா நடித்த தெனாவட்டு,கரண் நடித்த காத்தவராயன் படங்களில் வரும் பாடல்களில் ஒரு சில வரிகளை மட்டும் பாடியுள்ளார். மேலும், இவர் 22 சினிமா பாடல்களில் பாடி இருந்தாலும்,கிஷோர் சினேகா நடித்த 2013 இல் வெளியான ஹரிதாஸ் படத்தில் வரும் வெள்ளகுதிற என்ற பாடலை பாடியுள்ளார்.ஆட்டீசம்(autism) எனப்படும் மன இருக்க நோய் கொண்ட தனது மகனுக்கு ஒரு தாய் பாடும் பாடலாக இருந்த அந்த பாடலை தனது இனிமையான குரலில் பாடியிருப்பார் ரமணியம்மாள்




