இறுதி கட்டத்தை நெருக்கிய சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் 10- வெல்லப்போவது யார்? வெளியான அப்டேட்

0
129
- Advertisement -

சூப்பர் சிங்கர் சீனியர் 10 நிகழ்ச்சியின் ஃபைனல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் பாட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட, மழலை குரல்கள் ஒலிக்கும் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் சீனியர் 10:

சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் சீனியர் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமையில் நிகழ்ச்சியின் ஃபைனல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்க இருக்கிறது.

-விளம்பரம்-

இறுதி போட்டியாளர்கள்:

இதில் விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜோ, வைஷ்ணவி, ஸ்ரீனிதி ஆகியோர் பைனலில் தேர்வாகி பாட இருக்கிறார்கள். மேலும் இன்று நடக்க இருக்கும் இறுதி நிகழ்ச்சியில் பாடகர்களுக்கு முன்பே வரப்போகும் திரைப்பட வாய்ப்புக்கள், நிறைய எதிர்பார்ப்பு தருணங்கள், பிரபலங்கள் வருகை என பல சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நிகழ்ச்சி குறித்த அப்டேட்:

இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா, ஜான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாக பங்கேற்று இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த விழாவில் மனோவின் 40 வருட திரை வாழ்வை கொண்டாடும் விதமாக ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது. இப்படி பல அற்புதமான நிகழ்வுகள் இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதில் யார் வெற்றி? பெற்று பட்டத்தை வெல்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

Advertisement