விஜய் 62-வில் பாடப்போகிறாரா சூப்பர் சிங்கர் செந்தில்..?

0
913
- Advertisement -

என்னோட அம்மா அவங்களோட பருவ வயசுலதான் முதன் முதலா சினிமா பார்த்ததாச் சொல்வாங்க. `படம் ஓடுது, படம் ஓடுதுனு சொல்வாய்ங்கய்யா… எப்படி ஓடும்னு பார்க்க ஆசையா இருக்கும். முதல் தடவையா சினிமா கொட்டகைக்குப் போனப்போ, திரையைப் பார்த்து, என்ன இது வேட்டியைத் துவைச்சு காயப் போட்டிருக்காங்கனு கேட்டிருக்கேன்.

-விளம்பரம்-

senthil

- Advertisement -

கூட வர்றவுக, அவுகளுக்குத் தெரிஞ்சதை எடுத்து விடுவாக’னு என்கிட்ட சொல்லிக்கிட்டிருந்த அம்மாகிட்ட, `உன் புள்ள சினிமாவுல பாடப்போறேன்’னு சொன்ன அந்த நிமிடம், என் வாழ்க்கையில முக்கியமான சம்பவம் சார்!” – `சூப்பர் சிங்கர்’ சீசன் 6-ல் டைட்டில் வென்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பைப் பெற்றுள்ள செந்தில் கணேஷ் சொல்லும் வார்த்தைகள் நெகிழ வைக்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு குறித்துக் கேட்டோம்.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியோட டிராவல்ல ரெண்டு மூணு முறை அவர் முன்னாடி பாடியிருக்கேன். `இவன் ஜெயிச்சா இவனுக்கு என்ன பாட்டு தரலாம்’னு யோசிச்சு வெச்சிருப்பார். அவரோட ஃபோக் இசையில பாடுறது ரிஸ்க்னு சிலர் சொல்லக் கேட்டிருக்கேன். அந்த அனுபவத்துக்காக நானும் ஆவலோட காத்திருக்கேன்!” என்கிறார்.

இந்த வெற்றியின் முலம் செந்தில் விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தில் ஒரு பாடலை பாட வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் ஆசை. ஏனெனில் இப்படத்திற்கும் ரஹ்மான் தான் இசையமைக்கிறார் என்பது நமக்கு நன்றாக தெரியும்.

A.R.Rahman

ஒருவேளை இது நடந்தாலும் நடக்கும் என்பது விஜய் ரசிகர்களின் நம்பிக்கை. இது குறித்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

2 மணிக்கு சிம்பு சார் போன் பண்ணி, `நீங்க ஜெயிச்சதுல நான் ரொம்பவே சந்தோஷப்படுறேன். ஒருநாள் வீட்டுக்கு வாங்க, விருந்து வைக்கிறேன்’னு சொன்னார். கேட்கும்போதே சந்தோஷமா இருந்துச்சு. இதை எனக்கான வெற்றியா நான் நினைக்கலை. பஸ் கூட போகாத குக்கிராமங்களுக்கும் போய், கூட்டம் கம்மியா தெரிஞ்சாலும், மனசைத் தளரவிடாம பாடி, நாட்டுப்புற இசையை வாழ வெச்சுக்கிட்டு இருக்கிற ஒவ்வொரு கலைஞனுக்குமான வெற்றி இது.

Advertisement