கணவன் மறைவுக்குப் பின் மொட்டை அடித்து ஆளே அடையாமல் தெரியாத அளவிற்கு விஜய்-அஜித் பட நடிகை மாறி இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சுரேகா வாணி. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் பெரும்பாலும் தெலுங்கு மொழி படங்களில் தான் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
மேலும், தமிழில் இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல், அஜித்தின் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் போன்ற படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் நடித்த படங்கள் எல்லாமே பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இருந்தாலும், தமிழில் பெரிதாக இவருடைய படங்கள் வெளியாகவில்லை.
சுரேகா குறித்த தகவல்:
அதேசமயம் இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இதனிடையே நடிகை சுரேகா அவர்கள் சுரேஷ் தேஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சுப்ரிதா என்ற மகளும் இருக்கிறார். மேலும், இவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கையிலும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தார். ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு திடீரென்று சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.
சுரேகா கணவர் இறப்பு:
இவருடைய மறைவுக்கு பின் நடிகை சுரேகா வாணி தன்னுடைய மகளுடன் தனியாகத்தான் வசித்து வருகிறார். தன்னுடைய கணவருடன் இறப்பிலிருந்து மீண்டு வந்த சுரேகா அவர்கள் தன்னுடைய மகளுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு இருந்தார். இது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் இருந்தது. அது மட்டும் இல்லாமல் சுரேகா சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.
சுரேகா மறுமணம்:
இதனால் இவரை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதற்கிடையில் இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருக்கிறது என்றெல்லாம் டோலிவுட் வட்டாரத்தில் அதிகமான செய்திகள் வந்தது. ஆனால், அது குறித்து சுரேகா வாணி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் வந்தார். மேலும், இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்து வருகிறார். இந்த நிலையில் சுரேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
சுரேகா லேட்டஸ்ட் புகைப்படம்:
அதாவது சுரேகா அவர்கள் தற்போது மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இதை அவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று மொட்டை அடித்து தன்னுடைய நேர்த்திக்கடனை செலுத்தி இருக்கிறார். அந்தப் புகைப்படத்தை தான் இவர் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், சுரேகா வாணியா இது! ஆளே அடையாமல் தெரியாத அளவிற்கு மாறிப் போய் இருக்கிறார் என்றெல்லாம் கமெண்ட்களை போட்டு புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.