நான் நெனச்சி இருந்தா பெரிய லெவல்க்கு போய் இருக்கலாம் – சர்வைவரில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசிய பார்வதி.

0
3575
parvathy
- Advertisement -

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் சேர்த்து அவர்களுக்கு கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 18 பேர்களை இரு அணிகளாக காடர்கள், வேடர்கள் என பிரித்து சவால்கள் தொடங்கியது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் அன்று போட்டியாளர்களுக்குள் குழாயடி சண்டை அளவிற்கு சர்ச்சைகள் பயங்கரமாக ஆரம்பித்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பார்வதி கலந்து கொண்ட போதே அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. அதே போல பார்வதி சென்ற முதல் நாளில் இருந்தே தான் ஒரு போல்டான பெண் என்பதை காட்டிக்கொள்ள பேசிய அனைத்து விஷயங்களும் சக போட்டியாளர்களை கடுப்பு ஏற்றியது. இதனால் பார்வதிக்கும் பிற போட்டியாளர்களுக்கும் கூட சண்டை எழுந்தது. தற்போது இவர் முன்றாம் உலகிற்கு தள்ளப்பட்டு உள்ளார்.

இதையும் பாருங்க : மாநாடு படத்தின் ட்ரைலர் – விஜய் மற்றும் எஸ் ஏ சியை வச்சி செய்யும் நெட்டிசன்கள். (அநியாயம்டா இதெல்லாம்)

- Advertisement -

இந்தநிலையில் மூன்றாமுலகில் பார்வதி பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பது, மீடியாவில் இருக்கிறதனால் பொதுவாகவே மக்கள் யாரும் அவர்களுடைய மனதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சோசியல் மீடியாவில் வருவதையும் அவளுடைய முகத்தையும் பார்த்து தான் கருத்து சொல்வார்கள். நான் என் வாழ்க்கையில் நிறைய சந்தித்திருக்கிறேன். நான் நிறைய நிகழ்ச்சிகளில் பைனல் வரையும் வந்திருக்கிறேன். அப்போது ஒரு சிலர் நீங்க மத்தவங்க உங்க கிட்ட தப்பா நடந்துக்க கேட்ட நீங்க ஓகே சொல்லுவீங்களான்னு கேட்டாங்க.

நான் அப்படியெல்லாம் இருக்க முடியாது. என்னுடைய எழுத்துக்கும் திறமைக்கும் தான் மதிப்பு கொடுக்க வேண்டும் என்னுடைய உடலுக்கு இல்லை என்று எங்கள் வீட்டில் சொல்வார்கள். அதனால் எந்த இடத்திலுமே அட்ஜஸ்ட் பண்ணி எனக்கு போக அவசியம் கிடையாது. நான் நினைத்து இருந்தால் ஒரு நல்ல இடத்திற்கு போய் இருப்பேன் என்னால் முடியும் என்று சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement