கணவரின் புகைப்படங்கள் நீக்கம் – விவாகரத்து சர்ச்சை குறித்து முதன்முறையாக மனம் திறந்த ஸ்வாதி.

0
1307
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை சுவாதி. இவர் தனது விவாகரத்து குறித்து பத்திரிக்கையாளாருக்கு பதில் அளித்தார். தமிழில் இயக்குனர் சசி குமார் இயக்கத்தில் 2008 ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம் இயக்கத்தில் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் சுவாதி. அந்த படத்திற்கு நடிகை தமிழில் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா, வடகறி, யட்சன்,கனிமொழி, போராளி, யாக்கை போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

நடிகை ஸ்வாதி ரெட்டி அவர்கள் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர். மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெங்லுகு, மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் நடிகை ஸ்வாதி ரெட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. பின் இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை ஸ்வாதி அவர்கள் இந்தோனேசியாவை சேர்ந்த விகாஸ் என்ற நபரை தான் திருமணம் செய்து கொண்டார். விகாஸ் அவர்கள் ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

திருமணத்திற்கு பிறகு அவர் ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். புதிய தெலுங்கு படத்தில் நடிக்க சுவாதி ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. படப்பிடிப்பில் சுவாதி பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன. திருமணத்திற்கு பின் இந்தோனேசியாவில் குடியேறிய ஸ்வாதி சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் திரும்பி இருந்தார்.

அவரின் விவாகரத்து சர்ச்சை:

இவரின் விவாகரத்துக்கு காரணம் சமூக வலைத்தளங்களில் இருந்து திருமண போட்டோக்களை நீக்கிது தானே என்று சில வதந்திகள் பரவி வந்தனர். இது குறித்து நடிகை சுவாதி எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் இருந்தார். இப்போது தற்போது சமீபத்தில் தேவைப்பட விழாவில் கலந்து கொண்ட போது பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் விவாகரத்துக்கான காரணம் குறித்து மேடையில் வெளிப்படையாக கேள்வி எழுப்பினார். நடிகர்கள் பெரும்பாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மேடையில் பேச மாட்டார்கள்.

-விளம்பரம்-

அவர் கூறியது:

“நான் பின்பற்றும் விதிகளில் ஒன்று எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விவாதிக்கக் கூடாது. விவாகரத்து தொடர்பான உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை, ”என்று அவர் உறுதியாகக் கூறி கூறியிருந்தார். இருப்பினும், இந்த நேரத்தில், சுவாதி ரெட்டி தனது வரவிருக்கும் படத்திற்கான விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஊடகங்களால் தெளிவுபடுத்தப்பட்டபோது, ​​​​அவர் தனது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டார், “நான் இதைப் பற்றி கருத்து தெரிவிக்க மாட்டேன். இது தொடர்பில்லாத கேள்வி. நான் பேசமாட்டேன்.” என்றும் பத்திரிக்கையாளருக்கு பதிலளித்தார்.

Advertisement