எப்பா இது வீடா ? அரண்மனையா ? TRன் பிரமாண்டமான இரண்டாவது வீடை பார்த்திருகிங்களா ? வீடியோ இதோ.

0
376
tr
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் டி ராஜேந்தர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட இயக்குனர், இசை கலைஞர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். அதோடு டி ராஜேந்தர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு பல திறமைகளைக் கொண்டவர். அதன் பின்பு டி ஆர் ராஜேந்திரன் தனது மகன் சிலம்பரசனையே சினிமாவில் நடிக்க வைத்து தன் படங்களிலும் அவரை நடிக்க வைத்தார்.

-விளம்பரம்-

தனது தந்தை டி ஆர் ராஜேந்திரன் காதல் படங்களில் நடித்து தந்தை எழுதும் வசனங்களை தத்துருவமாக பேசி தமிழக இளைஞர்கள் மற்றும் பெண்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் இப்போது தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழகிறார் சிம்பு. சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார்.

- Advertisement -

சிம்புவை மீட்டு எடுத்த மாநாடு :-

அதன் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தர். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே. சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

சமீபத்தில் படங்களில் நடித்த டிஆர் :-

சமீப காலமாக படம் இயக்குவதை நிறுத்திய டி ராஜேந்திரன் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த கவண் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் பாடல் பாடியும் வந்தார். தற்போது இவர் ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் டி ராஜேந்திரன் அவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும் சிறந்த நடிகர், இயக்குனர்.

டி ராஜேந்தரின் உடல் நிலை :-

இந்த நிலையில் டி ராஜேந்தர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது . கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் டி ராஜேந்தர் அவர்கள் திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் . இருப்பினும் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறி வந்தனர் . ஆனாலும், மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு வெளிநாட்டிற்கு அழைத்து சென்று வந்தார்.அதன் பின் டிஆர் உடல் நலம் குணமாகி வருகிறார் என செய்திகள் வந்தது.

டிஆரின் இரண்டாவது வீடு :-

இந்நிலையில் டி ஆர் ராஜேந்திரன் தான் வசித்து வந்த தனது பழைய வீட்டை கட்சி அலுவலகமாகவும், தனது இணையதள குறள் டிவியின் அலுவலகமாகவும் மாற்றி இப்போது பங்களா போன்று இருக்கும் மிகப்பெரிய ஒரு வீட்டில் வசித்து வருகிறார் அந்த மிகப்பெரிய வீட்டின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக ஷேர் செய்யப்பட்டு வருகிறது அந்த வீட்டின் பிரம்மாண்டம் பார்பவரின் கண்னை பறிக்கும். இந்த பிரமாண்ட வீட்டில் இருந்து வீட் தான் பொழுதெல்லாம் டி ராஜேந்திரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு அனைத்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

Advertisement