தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி அறிமுக படத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற இவர், அடுத்து நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு மங்க தொடங்கியது.
தமிழில் லீட் நாயகியாக வலம் வர முடியவில்லை என்றாலும், இந்தியில் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் அவரை கவனிக்க வைத்தன. இதையடுத்து மேலும் பல இந்தி படங்களில் நடித்தார். இப்போது, தட்கா, மிஷன் மங்கள், ஷாந்த் கி ஆங்க் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சியாகவும் முத்த காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.
இதையும் பாருங்க : அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
சமீபத்தில் இவர் வெளியாகியுள்ள ‘கேம் ஓவர் ‘ திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸி. கவர்ச்சியாகவும் முத்த காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், இயக்குனர்கள் அதுமாதிரி என்னை நடிக்க வைக்க தயங்குகிறார்கள்.
என்னுடை படத்தை பார்க்க ரசிகர்கள் 200 ரூபாய், 300 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து 2, 3 மணிநேரம் ஒதுக்கி காண வருகின்றனர். அவர்களுக்காக நான் நல்ல கதைகளை தேர்வு செய்து வேண்டும். தென்னிந்திய ரசிகர்கள் நடிகைகள் மீது அதிக அன்பு வைத்துள்ளனர்.
என்னுடைய படங்கள் ஏன் 100 கோடி செய்வது இல்லை என்று கேட்கின்றனர். என்னுடை படங்கள் 30, 40 கோடி வசூல் அது எனக்கு சந்தோசம் தான். மேலும், திருமணம் எப்போது செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் ஆசை அந்த ஆசை வந்தால் நான் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார் டாப்ஸி.
தென்னிந்திய ரசிகர்களை மிகவும் பிடிக்கும் என்று இதே டாப்ஸி தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னிந்திய இயக்குனர் ஒருவரை மிகவும் கேலி செய்து பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.