“கூட்டணி யார்  யாருடன் ?” என்ற கேள்விக்கு விளக்கமளித்த பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை.

0
863
- Advertisement -

வரும் நாடளுமன்ற தேர்தலில் யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை நாங்கள் ஏற்றுகொள்வோம்  தமிழக மாநில தலைவர் அண்ணாமலை. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ராமேஸ்வரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரை தொடங்கி வைத்தனர்.  ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

இதில் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் அந்தந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார். இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூட்டணியில் உள்ள கட்சிகளை பற்றியும் அதிமுக, ஒ.பன்னீர்செல்வம் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

கூட்டணி கூறித்து அண்ணாமலை கூறியது:

பாஜக இந்தியாவில் மிக பெரிய கட்சி என்றும் நமது கட்சியின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்க பட்ட கட்சிகளுக்கு மட்டுமே எங்கள் தலைவர்கள் அழைப்புகளை விடுத்தனர் என்றும் அவர் கூறினார். மேலும் கூறிய அவர் கட்சி வளரவேண்டும் என்று நினைக்கிறோம், பாஜக இன்னும் மக்களிடையே நெருங்கி செல்ல வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் கூறிய அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் NDA கூட்டணிக்கு வந்தாலும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க தயார் எனவும் எங்களது கதவு எப்போதும் திறந்து இருக்கும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

-விளம்பரம்-

மேலும் கூறிய அவர் கூட்டணிக்கு வருபவர்களை பிரதமர் மோடியை ஏற்று கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார். வருபர்கள் நாடு ஒற்றுமையாக இருப்பது பற்றி அவர்கள் ஏற்று கொள்ளவேண்டும் என்றும் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில்  நீங்கள் போட்டியிட வாய்ப்புள்ளதாக என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை இல்லையென்றும் பாதயாத்திரை முடிந்த பிறகு கட்சி வேலைகள் இருக்கு மேலும் கட்சியை வளர்க்க வேண்டும் என்றும் பதிலளித்தார்.      

Advertisement