தமிழில் விஜய் நடித்த மெர்சல் படம் பல்வேறு தடைகளை தாண்டி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இந்த படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறை, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்து நடிகர் விஜய் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
அரசியல் தொடர்பான வசனங்கள் வீடியோ காட்சிகளாக தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதனால் மெர்சல் படத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பெரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த படம் தமிழில் மிக பெரும் வசூல் சாதனை படைத்ததுள்ளது.
இதையும் படிங்க: விஜய் அண்ணா அநியாயத்துக்கு இப்படிலாம் இருக்காதிங்க! விஜய்யை பற்றி பிரபல தொகுப்பாளி ?
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் மெர்சல் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளிலும் மெர்சல் வசூல் சாதனை படைத்துள்ளது.
இதனை தொடர்ந்து தெலுங்கில் ரிலீஸ் ஆனா மெர்சலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
இதில் குறிப்பாக ஜிஎஸ்டி வசனங்களுக்கு பெரும் கைத்தட்டல்கல் கிடைத்து வருகின்றதாம், இதனால், மெர்சல் படம் தெலுங்கிளும் மிக பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் மார்க்கெட் இதன் பிறகு தெலுங்கில் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.