புகார் அளித்த நித்யா.! காவல் நிலையம் சென்ற பாலாஜி.! அப்புறம் என்ன நடந்தது.!

0
958
Balaji
- Advertisement -

சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்பு குறையவே தொலைக்காட்சி பக்கம் திரும்பிவிட்டார். மேலும், கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாலாஜி வெளியேறியபோது நித்யா, பாலாஜிக்கு 100 நாள் பரீட்சை ஒன்றை வைத்தார்.

- Advertisement -

தற்போது அந்த நூறு நாட்கள் முடிந்து பல நாட்கள் ஆன நிலையிலும் இவர்கள் ஒன்றாக இணையவில்லை . இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் புகார் அளிக்கப்பட்ட மாதவரம் காவல் நிலையத்திற்கு சென்ற பாலாஜி, நித்யா கூறும் குற்றச்சாட்டு போய் என்று கூறியுள்ளார். மேலும், சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று நான் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்ததாகவும், இந்த பிரச்னையில் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் பாலாஜி கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement