ஒரு குடும்பத்தின் 11 பெண்களை ஒரே ஒரு போன்காலில் காப்பாற்றிய தளபதி விஜய்

0
1733
- Advertisement -

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துக் கொண்டே செல்கிறார்கள். ஊரடங்கு உத்தரவால் ஆங்காங்கே மாட்டிக் கொண்டு பல மக்கள் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பெண்கள் தூத்துக்குடியில் 40 நாட்கள் கழித்து வந்து உள்ளனர். பின் ஒரே ஒரு போன்கால் மூலம் அந்த 11 பெண்களையும் தளபதி விஜய் காப்பாற்றியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தேவிகா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பெண்களும் சென்னையை சேர்ந்தவர்.

-விளம்பரம்-
Vijay

இவர்கள் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு திருமணத்திற்காக சென்றிருந்தனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் அவர்கள் 11 பேரும் தூத்துக்குடியில் மாட்டிக்கொண்டனர். தேவிகா தவிர அவரது குடும்பத்தில் இருந்த மற்ற பெண்கள் அனைவரும் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கையில் இருந்த காசெல்லாம் செலவானது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து உள்ளனர்.

- Advertisement -

பின்னர் அவர்கள் பேருந்து நிலையங்களிலும் கோவில்களிலும் தங்கியிருந்தார்கள். ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அவர்கள் திண்டாடினார்கள். இந்த நிலையில் தான் தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை சந்தித்து தங்களுடைய நிலையை கூறினார்கள். உடனடியாக அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிஸி ஆனந்த் அவர்கள் விஜய்க்கு தகவல் கொடுத்து உள்ளனர். பின் தளபதி விஜய் அவர்கள் உடனடியாக தூத்துகுடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு போன் செய்து அந்த 11 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

Thalapathy Vijay's noble gesture to help people in need goes viral

இதனையடுத்து அந்த 11 பெண்கக்குளும் முறையாக அரசிடம் அனுமதி பெற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனை அடுத்து அந்த 11 பெண்களும் சென்னையில் உள்ள அவரவர் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே ஒரு போன் காலில் 40 நாட்களாக தூத்துகுடியில் தவித்த 11 பெண்களை தளபதி விஜய் காப்பாற்றியுள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

-விளம்பரம்-
Advertisement