சுதந்திர தினத்தில் நடைபெற்ற தமிழ் பேச்சு எங்கள் மூச்சு பைனல்ஸ் – முதல் பரிசு வென்றது யார் தெரியுமா ?

0
2002
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதி சுற்றில் வெற்றி பெற்ற நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது உள்ள யூடுயூப் கலாச்சார காலகட்டத்தில் தமிழுக்காக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மிகவும் சொற்பமே. விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி நாம் அறியாத பல்வேறு தமிழ் சொற்களை அறியும் வகையிலும், மாணவர்கள் மத்தியில் தமிழ் பற்றிய ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியை சமீப ஆண்டுகளாக ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டது விஜய் தொலைக்காட்சி. இந்த நிகழ்ச்சியை போலவே தற்போது விஜய் தொலைக்காட்சியில் தமிழ் மொழிக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி தான் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி. இது முழுக்க முழுக்க தமிழ் மொழி பேசும் போட்டி நிகழ்ச்சி. தமிழ்நாட்டில் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே இந்த நிகழ்ச்சியுடைய முக்கிய நோக்கம்.

- Advertisement -

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு:

அதோடு 2009 ஆம் ஆண்டு தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அதற்குப்பின் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி நிறுவனம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பத்மஸ்ரீ நிகழ்ச்சி தொல் திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், வைகோ, ஜெயமோகன் – எழுத்தாளர், நாஞ்சில் சம்பத், ஏ.முத்துலிங்கம், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பாராட்டையும் ஒப்புதலையும் பெற்றுள்ளது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

தமிழகம் முழுவதும் உள்ள பல ஊர்களில் இதற்கான தேடலை விஜய் டிவி நடத்தி இருந்தது. மேலும், முதலில் இந்த நிகழ்ச்சியில் தமிழ் கடல் நெல்லை கண்ணன், கவிஞர் தமிழ் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். பின்னர் இடையில் இந்த நிகழ்ச்சியை அப்படியே விட்டுவிட்டனர். இப்படி ஒரு நிலையில் பல ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்ச்சியை மீண்டும் தொடர்ந்து இருக்கிறது. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் மற்றும் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர் ஈரோடு மகேஷும் தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

நிகழ்சியின் இறுதி சுற்று:

இந்த நிகழ்ச்சியில் பல விதமான சுற்றுக்குள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று இருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் அருண், பிரிட்டோ, கார்த்திக் ராஜா, ராகவேந்திரன் மற்றும் நாராயணன் கோவிந்தன் ஆகிய ஐந்து பேர் கலந்து கொண்டு மும்முறமாக பேசி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுகி சிவம், சுப வீரபாண்டியன், பாடலாசிரியர் பா. விஜய், எழுத்தாளர் பவாசெல்லதுரை, கவிஞர் சல்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

வெற்றி பெற்ற நபர்:

நிகழ்ச்சியில் முதல் இடத்தை ராகவேந்திரன் பிடித்திருக்கிறார். இரண்டாம் இடத்தை பிரிட்டோ, மூன்றாவது இடத்தை அருண், நான்காவது இடத்தை கார்த்திக் ராஜா, ஐந்தாவது இடத்தை நாராயணன் கோவிந்தன் பிடித்திருக்கிறார்கள். இதில் வெற்றி பெற்ற முதல் நபருக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் தங்க மைக் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் வெளியானது தொடர்ந்து வெற்றி பெற்ற நபருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement