தமிழும் சரஸ்வதியும் தொடரில் இருந்து தர்ஷனா விலகிய உண்மை காரணம் – நண்பர்கள் சொன்னதால் கமிட் ஆன சங்கீதா.

0
1425
Thamizhum Saraswathiyum
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பானது. இந்த தொடரை குமரன் இயக்குகிறார்.இந்த தொடரில் தமிழ் கதாபாத்திரத்தில் தீபக், சரஸ்வதி கதாபாத்திரத்தில் நச்சத்திரா நடிக்கிறார்கள். இவர்களுடன் ரேகா கிரிஷ்ணப்பா, தர்ஷனா, மீரா, ரமணிசந்திரன், நவீன் வெற்றி, பிரபாகரன் சந்திரன், அனிதா வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது சீரியலில் அர்ஜுன் தான் திட்டமிட்டபடியே சரஸ்வதி மற்றும் தமிழை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.

-விளம்பரம்-

இதனால் மொத்த குடும்பமும் சரஸ்வதி தமிழ் மீது கோபத்தில் இருக்கிறது. தமிழ் எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று தன்னுடைய புதிய தொழில் தொடங்குவதற்காக முயற்சி செய்கிறார். இதற்கு சரஸ்வதி உறுதுணையாக இருக்கிறார். ஆனால், அர்ஜுன் அவர்களை தொழில் தொடங்க விடக்கூடாது என்பதற்காக பல பிரச்சனைகளை தருகிறார். இருந்தும் தமிழ், அர்ஜுன் கொடுக்கும் தொல்லைகளைக் கடந்து சாதிக்க போராடுகிறார்.

- Advertisement -

சீரியல் கதை:

இன்னொரு பக்கம் வசுவிற்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்று தமிழ் ஆசைப்படுகிறார். தமிழின் ஆசை நிறைவேறுமா? தமிழ் சாதிப்பாரா? அர்ஜுனின் உண்மை முகம் தெரிய வருமா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை விலகிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சீரியலில் விலகிய நடிகை:

அதாவது, இந்த சீரியலில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷனா. இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இவர் திடீரென்று இந்த தொடரை விட்டு விலகி விட்டார். இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இவர் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணமும் தெரியவில்லை. தற்போது வசு கதாபாத்திரத்தில் நடிகை சங்கீதா நடிக்கிறார்.

-விளம்பரம்-

ஒப்பந்தத்தை மீறிய தர்ஷனா :

இந்தத் தொடரில் தர்ஷனா கமிட்டான போதே வேறு எந்த தொடரிலும் நடிக்க கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. அப்போது தர்ஷனாவும் அந்த ஒப்பந்தத்தை ஏற்று கையெழுத்திட்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் வேறொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் தொடரில் தர்ஷனா கமிட்டானதால் ஒப்பந்தத்தை மீறிய அடிப்படையில் இந்த தொடர்பில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

சங்கீதா கமிட் ஆனது எப்படி :

தர்ஷனா வெளியேறியதால் இந்த தொடரில் நடிக்க சங்கீதாவை சீரியல் குழு அணுகி இருக்கிறது. இது குறித்து பேசிய அவர் ‘ இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இந்த தொடரில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. இதற்கு முன் நடித்தவர்கள் ஏற்கனவே அந்த கேரக்டரை செட் பண்ணி வைத்திருப்பார்கள் அதனால் என்னை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று கொஞ்சம் தயங்கினேன். ஆனால், நண்பர்களிடம் கேட்டபோது இது நல்ல பாசிட்டிவான கதாபாத்திரம் என்று சொல்லி இருந்தார்கள். எனவே நானும் ஒப்புக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement