ஆசைக்கு ஒரு படம் நடிச்சார்னு நெனைச்சீங்களா – அடுத்த படத்திற்கு தயாரான லெஜெண்ட் சரவணன்.

0
462
Thelegend
- Advertisement -

லெஜெண்ட் சரவணன் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். மேலும், தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார்.

-விளம்பரம்-

இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் அருள் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான படம் தி லெஜெண்ட். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : குறையும் பட வாய்ப்புகள் – இன்ஸ்டாவில் நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி வலைவிரிக்கும் ஷாலினி பாண்டே.

தி லெஜன்ட் படம்:

இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, விவேக், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தி லெஜன்ட் படம் விமர்சனம்:

மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள். அதிக எதிர்பார்ப்புடன் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகள் வெளியாகி இருந்தது. தமிழில் தயாரான இந்த படம் தற்போது தெலுங்கு, கன்னடம், இந்த ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பான் இந்திய படமாக மாறியுள்ளது. படத்தில் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் சரவணன் நடித்திருந்தார்.

படத்தின் கதை:

சரவணனின் நண்பன் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பின்னொருநாள் சரவணனின் நண்பர் சக்கரை வியாதியால் இறந்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இனி பிறக்கும் எந்த உயிருக்கும் சக்கரை வியாதி இருக்கக் கூடாது என முடிவு செய்து தீவிர முயற்சியில் இறங்குகிறார். இந்த முயற்சியில் சரவணன் வெற்றி கண்டாரா? இல்லையா? வந்த தடைகளை தகர்த்தெரிந்து முன்னேறி சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சரவணன் அருள் நடிக்கும் அடுத்த படம்:

இந்த படத்தின் மூலம் சரவணன் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார் என்று சொல்லலாம். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் சரவணன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, நல்ல கதையம்சம் உள்ள படத்தில் சரவணன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது சில இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்டு இருக்கிறார். இதனால் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement