பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் freeze and release டாஸ்க் போய் கொண்டிருக்கிறது. இவர்கள் freeze நிலையில் இருக்கும் போது வீட்டில் உள்ள யாரவது ஒருவருக்கு வேண்டியவர்கள் வீட்டின் உள்ளெ வருகிறார்கள். நேற்றைய நிகழிச்சியில் வையாபுரி மனைவி மற்றும் பிள்ளைகளும், பிந்துவின் நண்பர்களும், ஹரிஷ் அவர்களின் பெற்றோர்களும் வந்தனர்.
இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில் BiggBoss வீட்டில் இருக்கும் அனைவரும் தேம்பி தேம்பி அழுகின்றனர்.
ஆனால் அவர்கள் எதற்காக இப்படி அழுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு வேளை சினேகன் அவர்களின் உறவினர்கள் வருகையால் இப்படி ஒரு சோகமா வீட்டில் என்று ரசிகர்கள் குழும்பிய நிலையில் இருந்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு கவிஞர் சினேகனின் தந்தையுடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், இந்த புகைப்படம் பிக்பாஸ் வீட்டில் எடுக்கப்பட்டது போல இல்லை. எதோ ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் இருவரும் அமர்ந்திருப்பது போல உள்ளது.
ஒருவேளை சினேகன் தனது சொந்த ஊருக்கு பிக்பாஸ்-ன் அனுமதியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிசென்றுவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.