வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலக காரணம் இதுதான் என்று பிரபல தயாரிப்பாளர் போட்டு உடைத்து இருக்கும் உண்மை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.
பின் இவர் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சூர்யா – பாலா கூட்டணியில் படம் ஒன்று உருவாக இருந்தது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.
சூர்யா– பாலா கூட்டணி:
ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
பின் 21 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து வணங்கான் என்ற படத்தில் பணியாற்றி இருந்தார்கள். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்டமும் தொடங்கி இருந்தது. பின் திடீரென்று வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து சூர்யா-பாலா இருவருமே அறிக்கை விட்டு இருந்தார்கள். ஆனால், எதற்காக படத்தில் இருந்து சூர்யா விலகினார் என்று தெரியவில்லை.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேட்டி:
மேலும், இது தொடர்பாக பல கருத்துக்கள், வதந்திகள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் இருந்தது. அதிலும், சூர்யாவை பாலா அடித்துவிட்டார் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். இருந்தும் இது குறித்து பாலா- சூர்யா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதன்முறையாக பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர், பாலா அவர்கள் சூர்யாவை அடித்தார் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். ஆனால், அதில் துளி கூட உண்மை இல்லை.
வணங்கான் படம் குறித்த தகவல்:
அவரை வெறும் காலுடன் ஓட விட்டார் என்பது உண்மையாக இருக்கலாம். அதுவும் படப்பிடிப்பிற்கு தான். மற்றபடி சோசியல் மீடியாவில் வரும் வதந்திகள் எல்லாம் உண்மை கிடையாது என்று கூறியிருக்கிறார். மேலும், வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிய பிறகு ஹீரோவாக அருண் விஜய் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரகனி, மிஸ்கின், சண்முகராஜன் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
கங்குவா படம்:
தற்போது சூர்யா அவர்கள் அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் படம் வருவதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் 3டில் உருவாகி இருப்பதாக படக்குழு கூறி இருக்கின்றனர்.