“Ticket To Finale” கைப்பற்றிய போட்டியாளர் யார்..? ஆனால் நடக்கப்போவது இதுவா..?

0
1062
janani
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி பௌலில் கையில் ஏந்திக் கொண்டு ஒரு வட்ட மேடையில் நடந்து வர வேண்டும். ஒவ்வொரு முறை பஸ்ஸர் ஒளித்தவுடன் யாரது பௌலில் தண்ணீர் குறைவாக இருக்கிறதோ அவரகள் போட்டியில் இருந்து வெளியேற்ற படுவார் என்பது தான் டாஸ்க்.

-விளம்பரம்-

bgg-boss

- Advertisement -

இந்த டாஸ்க் தொடுங்குவதற்கு முன்பாகவே ஜனனி ஐயர் தான் டாஸ்கில் வெற்றி பெற்று பைனலுக்கு நேரடியாக செல்லும் கோல்டன் டிக்கெட்டை பெற்றதாக நேற்றே சில செய்திகள் சமூக வளைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் இந்த டாஸ்கில் இருந்து பாலாஜி, ஐஸ்வர்யா, ரித்விகா ஆகியோர் வெளியேறி விட்டனர் .

இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் பார்க்கும் போது ஜனனி ஐயர் மற்றும் யாஷிகா தான் இறுதி வரை நின்று கொண்டிருக்கின்றனர். அதில் ஜனனி வைத்திருந்த பவுலில் தான் தண்ணீர் மிகவும் கம்மியாகவும், யாஷிகா பௌலில் அதிமாக தண்ணீர் இருக்கின்றது. எனவே, யாஷிகா தான் வெற்றி பெற்றுள்ளாரோ என்று தோன்றுகிறது.

-விளம்பரம்-

Bigg-boss-task

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை ப்ரோமோவை வைத்து நாம் எதுவும் முடிவு செய்ய முடியாது. பெரும்பாலும் ப்ரோமோ விடீயோக்களில் மக்களின் சுவாரசியத்தை அதிகரிக்க நிகழ்ச்சியில் ப்ரோமோவில் வேறு மாதிரி காண்பித்து விட்டு பின்னர் அதே கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது அது முற்றிலும் எதிர்பாராதா திருப்பமாக இருக்கும். எனவே, டிக்கெட் டு பினாலே டாஸ்கில் யாஷிகா மற்றும் ஜனனியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது இன்று நீகழ்ச்சி ஒளிபரப்பான பின்பே தெரியும்.

ஆனால், நேற்று வரை ஜனனி தான் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றார் என்று சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியது, அதே போல ஐஸ்வர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் கூட ஜனனி தான் டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்றதாகவும், இந்த வாரம் ரித்விகா வெளியேறியதாகவும் ஏற்கனவே தகவல் ஒன்றும் வெளியாகி இருந்தது.

janani

Aishwarya

அதே போல இன்று வெளியான டாஸ்கின் இறுதியில் ஜனனி தான் மிகவும் சந்தோசமாக உள்ளார். அதே போல யாஷிகா வெற்றி பெற்றிருந்தால் கண்டிப்பாக அந்த இடத்தில ஐஸ்வர்யா இருந்திருப்பார். ஆனால், அந்த ப்ரோமோவில் யாஷிகாவின் அருகில் ஐஸ்வர்யா இல்லை. எனவே, பெரும்பலம் கோல்டன் டிக்கெட்டை ஜனனி தான் வெற்றி பெற்று இருக்கலாம் என்பதை எங்களின் கருத்து.

Advertisement