தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டிக்டாக் சூர்யா வழக்கு – நீதிபதியின் பதில் இதான்.

0
449
rowdy
- Advertisement -

தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று டிக் டாக் பிரபலம் சூர்யா தொடர்ந்திருக்கும் வழக்கு தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டிக் டாக் மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர் திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரை சேர்ந்தவர். ஆனால், இவருடைய பூர்விகம் மதுரை தான். அதோடு இவரின் உண்மையான பெயர் சுப்புலட்சுமி. சமூக வலைதளமான டிக்டாக்கில் இவர் தன்னுடைய பெயரை சூர்யா என்று வைத்து கொண்டார்.

-விளம்பரம்-

இவருடைய நண்பர் தான் சிக்கா. இருவரும் சேர்ந்து ஆபாசமாகப் பேசுவது, வீடியோ போடுவது என்று தேவை இல்லாத வேலை செய்து கொண்டு வந்தார்கள். பின் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்ஸில் தன்னுடைய கவனத்தை திருப்பினார்கள். இருவருக்கும் தனித்தனியாக கல்யாணம் ஆகி குடும்பம் இருந்தாலும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கிறார்கள். அதோடு இவர்கள் ஒரு யூடியூப் சேனல் ஒன்றும் நடத்துகிறார்கள்.

- Advertisement -

ரவுடி பேபி சூர்யா- சிக்கா தொடர்பு:

மேலும், இவர்கள் இருவரும் சண்டைபோட்டு பிரிவதும், இணைவதும் வழக்கமாக வைத்திருந்தார்கள். இது குறித்து பலரும் இவர்களை திட்டி கருத்து தெரிவித்து இருந்தார்கள். பின் ஒரு கட்டத்தில் பிரிந்து சென்ற சிக்கா மீது கோபத்தில் இருந்த சூர்யா துபாய்காரர் ஒருவருடன் எனது வாழ்க்கையை தொடங்கப் போவதாக அறிவித்து போஸ்ட் ஒன்று போட்டிருந்தார். உடனே ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிக்கா உடன் இணைந்து ஆபாசமாக வீடியோ போட்டு இருந்தார்.

ரவுடி பேபி சூர்யா மீது புகார்:

அதுமட்டுமில்லாமல் இவர் யூடியூப் சேனலில் தனக்கு பிடிக்காதவர்களை தாறுமாறாக தீட்டி பேசியும் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து யார் என்ன சொன்னாலும், போலீசில் புகார் கொடுத்தாலும் என்னை எதுவும் செய்ய முடியாது என்றும் டயலாக் எல்லாம் பேசி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர்கள் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருவதாக சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்ட பெண் ஒருவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் கமிஷனர் அலுவலகத்திலும், தமிழக டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

கைதான ரவுடி பேபி சூர்யா:

இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யாவையும், சிக்காவையும் மதுரையில் வைத்து கைது செய்தனர். அதோடு ரவுடி பேபி சூர்யா மீது நிறைய பெண்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதனால் தான் போலீஸ் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்து இருந்தது. மேலும், ரவுடி பேபி சூர்யா மீது உள்ள குற்றங்கள் தொடர்பான விவரங்களை எல்லாம் சேகரித்து ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ரவுடி பேபி சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறார்.

நீதிமன்ற உத்தரவு:

அதில் அவர், காழ்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டிருக்கிறது. எனது கோரிக்கையை அறிவுரை கழகம் உரிய முறையில் பரீசிலிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனை அடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர், பெண்களுக்கு எதிராக சுப்புலட்சுமி ஆபாசமாக பேசுகிறார். அந்த வீடியோக்களை பார்த்து நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டும் என கூறி லேப்டாப் மூலம் டிக் டாக் சூர்யா பேசும் காட்சிகள் எல்லாம் நீதிபதிகளிடம் காண்பித்து இருந்தார். சூர்யா பேசியிருக்கும் பேச்சுகளை கேட்டு அதிர்ச்சியடைய நீதிபதிகள் இந்த வழக்கில் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது விசாரணையை ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement