-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

இதனால் தான் ஹிந்தியில் நான் நடிக்கவில்லை- முதன் முதலாக மனம் திறந்த நடிகை த்ரிஷா

0
216

இந்தி படங்களில் நடிக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகை திரிஷா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், இவர் சமீப காலமாகவே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு திரிஷா அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திரிஷா திரைப்பயணம்:

இந்த படத்தின் மூலம் திரிஷாவிற்கு இன்னும் ரசிகர் கூட்டம் உருவானது என்று சொல்லலாம். இதனை அடுத்து வெளியாகி இருந்த ராங்கி என்ற திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதற்கு பின் திரிஷா அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆதி, திருப்பாச்சி,கில்லி, குருவி போன்ற பல படங்களில் இருவரும் இணைந்து நடித்து இருந்தார்கள்.

திரிஷா நடித்த படங்கள்:

-விளம்பரம்-

அதன் பின் 14 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா, விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் சமீபத்தில் வெளியான தி ரோடு என்ற படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து இருக்கிறார். இது ஒரு வெப் சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது இவர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

திரிஷா பேட்டி:

தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் திரிஷா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம், இந்தி படங்களில் ஏன் நடிக்க விலை என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு திரிஷா, நான் 2010ஆம் ஆண்டு வெளிவந்த கட்டா மீட்டா என்ற படத்தில் அக்ஷய் குமார் உடன் இணைந்து நடித்திருந்தேன்.

ஹிந்தியில் நடிக்காத காரணம்:

அந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் நான் ரொம்பவே மனமடைந்து விட்டேன். அதோடு இந்தி ரசிகர்கள் மனதில் என்னால் இடம் பிடிக்க முடியாமல் போனது. அதுவே ஹிந்தியில் என்னுடைய முதலும் கடைசியும் படமாக அமைந்து விட்டது. இதனால் தான் நான் பாலிவுட்டில் இருந்தே விலகி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news