பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் மர்மமான முறையில் இறந்து உள்ளார். இதனால் கேரளாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை சேர்ந்தவர் நடிகை ஜாகி ஜான். இவர் முதலில் மாடலிங் செய்து கொண்டு தான் வந்தார். இதன் மூலம் இவருக்கு தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் நடிகை ஜாகி ஜான் அவர்கள் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். மேலும், இவர் ரோஸ்பவுல் என்ற தொலைக்காட்சியில் ஜாகிஸ் குக்புக் என்ற ஷோவையும் நடத்தி வந்தார். நடிகை ஜாகி ஜான் அவர்கள் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள குறவன்கோனம் என்ற பகுதியில் தனது அம்மாவுடன் ஒரு பிளாட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று ஜாகி ஜான் அவர்கள் தனது வீட்டில் சமையல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவருடைய இறப்பிற்கு காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜாகி ஜான் அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் ஜாகி ஜான் மரணத்திற்க்கான காரணத்தை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றார்கள். அது மட்டும் இல்லாமல் நடிகை ஜாகி ஜான் அவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.
இதையும் பாருங்க : இந்த ஆண்டு வாங்கிய அனைத்து விருதுகளுடன் திரிஷா கொடுத்த போஸ். வைரலாகும் புகைப்படம்.
கடைசியாக இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் “2019 நீங்கள் அழுத கண்ணீர், நீங்கள் 2020க்கு நடவு செய்ய விதைகளுக்கு தண்ணீர் ஊற்றட்டும் என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், எப்படி இவர் மர்மமான முறையில் இறந்தார் என்று ரசிகர்களும்,பிரபலங்களும் பல கேள்விகளை இணையங்களில் எழுதி வருகின்றன. இதனால் கேரளாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் நடிகை ஜாகி ஜான் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.
இதே மாதிரி நிறைய பிரபலங்களின் இழப்புகள் மர்மமான முறையில் உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று இன்று வரை போலீசார்கள் தெரியப்படுத்தவில்லை. நடிகை சிம்ரனின் தங்கை, ஹீரோ குணால் உட்பட பல நபர்களை சொல்லி கொண்டே போகலாம். இவர்கள் மரணத்திற்கு தொழில் ரீதியாக காரணம் இருக்குமோ?? என்றும் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.