சத்தமில்லாமல் இவ்ளோ நல்ல விஷயங்கள் பண்ணியிருக்காரா சிவா ? – இயக்குனர் சொன்ன சீக்ரெட்.

0
370
sk
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால் சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் அனுதிப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் உக்ரேனிய நடிகை மரிய ரைபோஷப்கா நடித்த திரைப்படம் பிரின்ஸ் திரைப்படம் படு தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை நினைத்து மனம் தளராத சிவகார்த்திகேயன் நம்பிக்கையுடன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இரா.சரவணன் பதிவு :

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள் என்பதினால் சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை கூறிவரும் நிலையில் சிவகார்த்திகேயன் பற்றிய சில தகவல்களை தன்னுடைய முகப்பு பக்கத்தில் பகிர்ந்துள்ளார் “உடன் பிறப்பே” பட இயக்குனர் இரா. சரவணன். அவர் அந்த பதிவில் ” சினிமா சம்பந்தப்பட்ட ஓர் ஆளுமைக்கு திடீர் நெஞ்சு வலி. அப்பல்லோவில் அட்மிட். அறுவை சிகிச்சைக்குப் பணம் தேவை என்பதால் நண்பர்கள் நாங்களும் திண்டாடினோம். அ.வினோத் ஒரு லட்சம் கொடுத்தார்.

- Advertisement -

சிவகார்த்திகேயனிடம் உதவி கேட்கவில்லை :

மற்றவர்களும் கொடுத்தார்கள். ஆனாலும், அப்படி திரட்டியம் தொகை போதுமானதாக இல்லை. “சார், நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டுப் பார்க்குறீங்களா?” என என்னிடம் ஒருவர் சொல்ல, நான் சட்டென மறுத்துவிட்டேன். காரணம், நான் சிவாவிடம் நிறைய கேட்டுவிட்டேன். அவரும் மறுக்காமல் செய்துகொண்டே இருக்கிறார். முடியாது என அவர் சொன்னதே இல்லை. அதற்காக எல்லாவற்றுக்கும் அவரிடம் போய் நிற்பது எனக்கு நியாயமாகப்படவில்லை.

ஒரே போனில் ஏற்றுக்கொண்டார் :

இரண்டு நாட்கள் கழித்தும் போதிய தொகையைத் திரட்ட முடியாத நிலையில், வேறு வழியே இல்லை. விஷயத்தைத் தம்பி சிவகார்த்திகேயனிடம் மொத்தமாகக் கொட்டித் தீர்த்தபோது, “நான் பார்த்துக்குறேன். தொகை முழுவதையும் நான் கட்டுறேன். என் பங்களிப்பை அவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். எல்லோரும் சேர்ந்து அவருக்காக நிற்பதாகவே இருக்கட்டும்…” என்றார் சிவா. சட்டென ஒரே ஒரு போனில் மொத்த பாரத்தையும் கைமாற்றிக்கொண்ட தம்பி சிவாவின் அன்பு கோடி பெறும்.

-விளம்பரம்-

குலுங்கி அழுது விட்டார் :

“திரட்டிய தொகை கையில் இருக்கிறது. தேவைப்படும் தொகையை மட்டும் மருத்துவமனைக்குக் கொடுத்தால் போதும் தம்பி…” என வற்புறுத்திச் சொன்னேன். “அவர் ரொம்ப முக்கியமான ஆள். பேசுறப்ப அவ்வளவு எனர்ஜி கொடுக்கிற மனிதர். ஹாஸ்பிடலில் பேசி அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் செஞ்சு கொடுங்க என சிவா காட்டிய அக்கறை அந்த உதவியைவிட மேலானது. சிகிச்சையில் இருக்கும் அந்த ஆளுமையிடம் சிவாவின் வார்த்தைகளை அப்படியே சொன்னேன். குலுங்கி அழத் தொடங்கிவிட்டார். “என்னை இந்தளவுக்கு நினைவு வைச்சிருக்காரே” என நெகிழ்ந்து போனார்.

பல பேருக்கு உதவி :

சிவகார்த்திகேயன் போன்றவர்கள் உற்ற துணையாக நிற்பதுதான் அவருக்குப் பெரிய ஆறுதல். நெல் ஜெயராமன் தொடங்கி நீட் பயிற்சிக்குப் போராடிய பூக்கொல்லை சகானா வரை எத்தனையோ பேருக்கு சிவகார்த்திகேயன் உதவி இருக்கிறார். பேருக்கு உதவினோம் என்றில்லாமல், தொடர்ந்து அவர்கள் குறித்து விசாரிப்பதும் மேற்கொண்டு உதவுவதுமாக சிவா காட்டும் அக்கறை உண்மையானது; பரிபூரணமானது.

சத்தமில்லாமல் உதவி செய்த சிவகார்த்திகேயன் :

நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை இன்றளவும் ஏற்று வருகிறார் சிவா. இன்னும் பட்டியலிட நிறைய இருக்கின்றன. எதையும் பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல் எல்லாமும் செய்யும் அன்புத்தம்பி சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். ஒருவருடைய வெற்றியும் சம்பாத்தியமும் அவருக்கும் அவர் குடும்பத்துக்காகவும் மட்டுமே அல்லாமல், பலருக்குமான பலனாக அமைவது பெரிய சிறப்பு. அந்த வகையில் தம்பி சிவகார்த்திகேயன் எல்லோருக்குமான நம்பிக்கை! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement