விஷால் நடிப்பில் `துப்பறிவாளன்’ படத்தை இயக்கிய மிஷ்கின், அதற்கடுத்து சாந்தனுவை வைத்து படம் இயக்குவதாகக் கூறியிருந்தார். தற்போது அந்தப் படத்தில் உதயநிதியைக் கதாநாயகனாக்க மிஷ்கின் முடிவுசெய்துள்ளார். த்ரில்லர் ஜானரில் தயாராகவிருக்கும் இப்படத்தில் நித்யாமேனனைக் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக அப்ரோச் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவை பி.சி.ஶ்ரீராம் மேற்கொள்கிறார். படத்தின் இசையை இளையராஜா மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, மிஷ்கின் நடித்து இயக்கிய நந்தலாலா படத்தில் சாந்தனு நாயகனாக நடிக்கவிருந்தது.
அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதும் சாந்தனுவுக்கு இப்படம் பெரிய திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உதயநிதி, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் தமன்னாவுடன் இணைந்து ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.