‘மூன்று ஆண்டுக்கு முன் இதே நாளில்’ – கணவரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் அவரது மனைவி போட்ட உருக்கமான பதிவு.

0
752
Sethu
- Advertisement -

தன் கணவரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் சேதுராமனின் மனைவி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன்கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன். டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார்.

- Advertisement -

மருத்துவர் + நடிகர் :

இதில் சந்தானம் பாபிசிம்ஹா நிதின் சத்யா வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமாவை திருமணம் செய்து கொண்டார்.

மாரடைப்பால் மறைந்த சேதுராமன் :

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல இந்த நிலையில் டாக்டர் சேதுராமன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்து விட்டார் என்ற ஒரு வதந்தியும் பரவியது. ஆனால், அவர் மாரடைப்பால் தான் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

சேதுவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் :

சேதுராமன் இறந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் சேதுராமன் இறந்த 5 மாதத்தில் உமாவிற்கு ஆண் குழந்தை பிறந்தத. தன் கணவர் மீண்டும் வந்துவிட்டார் என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று தன் கணவருடன் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் உமா உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘வாழ்கை மிகவும் நியாயமற்றது. ஏன் எனக்கு, இவ்வளவு இளம் வயதில் ஏன் வாழ்க்கை ஒரே இரவில் இருளாக மாற வேண்டும். இப்படி நடக்க வேண்டிய அளவுக்கு நாம் யாராவது ஒருவருக்கு ஏதாவது கெடுதலை செய்தோமா?

மூன்று ஆண்டுக்கு முன் இதே நாளில் :

எல்லாம் முடிந்துவிட்டது என்று என் கண்ணீர் தீரும் வரை அழுதேன். இனி என்னை சுற்றி இருக்கும் நபர்களை பற்றி நான் கவலைப்பட போவதில்லை. உங்கள் இறப்புக்கான காரணத்தை நான் தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அப்பா எங்கே என்று என் குழந்தைக்கு கேட்டால் நான் என்ன சொல்லுவேன். தந்தை அவனுக்கு கொடுத்த அன்பை என்னால் கொடுக்க முடியுமா ? போன்ற எந்த எண்ணமும் 26 மார்ச் 2020 ஆம் ஆண்டு எனக்கு இல்லை. நீங்கள் என்னை பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுநாள் வரை இப்படி ஒரு எண்ணம் எனக்கு ஒரு நாள் கூட தோன்றியது இல்லை.

கணவருக்கு அளித்த வாக்கு :

நான் இதை சமாளிப்பேன் என்று தான் வாழ்க்கை இதை எனக்கு கொடுத்திருக்கிறது.karma is a boomarang, நாம் என்ன கொடுக்கிறோமோ அதையே பெறுவோம். மேலே இருக்கும் சக்திக்கு மிகவும் நன்றி. கடந்த மூன்று ஆண்டுக்கு முன் இதே நாளில் எனக்கும் சேதுவிற்கும் ஒரு சின்ன மன சாபமே, ஒரு சிறிய சண்டை கூட ஏற்பட்டதில்லை. மிகவும் சாதாரண நாளாக தான் இருந்தது. எனவே நம் அன்புக்குரியவர்களிடம் அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை வெளி காட்ட வேண்டும். நமக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை மறக்க வேண்டும். என்னை சுற்றி இருப்பவர்களையும் என்னுடைய மகனையும் சந்தோஷமாக வைப்பேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் சேது’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement