7 ஆண்டுக்கு முன் இதே நாளை திரும்பி பார்க்கும் போது – திருமண நாளில் சேதுராமன் மனைவி போட்ட உருக்கமான பதிவு.

0
520
uma
- Advertisement -

தங்கள் திருமண நாளில் சேதுராமனின் மனைவி உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன்கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன். டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார்.

- Advertisement -

மருத்துவர் + நடிகர் :

இதில் சந்தானம் பாபிசிம்ஹா நிதின் சத்யா வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாரடைப்பால் மறைந்த சேதுராமன் :

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல இந்த நிலையில் டாக்டர் சேதுராமன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்து விட்டார் என்ற ஒரு வதந்தியும் பரவியது. ஆனால், அவர் மாரடைப்பால் தான் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

உமாவிற்கு பிறந்த சேது :

சேதுராமன் இறந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் சேதுராமன் இறந்த 5 மாதத்தில் உமாவிற்கு ஆண் குழந்தை பிறந்தத. தன் கணவர் மீண்டும் வந்துவிட்டார் என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார். சேதுராமன் இறப்பிற்கு பின் தன் இரண்டு பிள்ளைகளை கவனித்து வருகிறார் உமா. இந்த நிலையில் நேற்று தன்னுடைய திருமண தினத்தில் உமா சேதுராமன் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

திருமண நாள் பதிவு :

அதில் இதே நாளில் ஏழு ஆண்டுகள் திரும்பிப் பார்க்கும்போது காலங்கள் எப்படி கடந்துவிட்டது என்பதை உணருகிறேன். நம்மை சுற்றி அனைத்தும் மாறிவிட்டது. ஆனால், அன்பு மட்டும் அப்படியே இருக்கிறது. உங்களுக்கு அழிவே கிடையாது, எப்போதும் நீங்கள் வானத்தை தொட நினைக்கும் ஒரு சிறந்த மருத்துவர் தான். உங்கள் மீதான என்னுடைய காதலும் எப்போதும் அழியாது. இந்த நாளை நாம் எப்போதும் கொண்டாடியது இல்லை. ஏனென்றால் உங்களுக்கு வெளிக்காட்டுவது பிடிக்காது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நான் இதை வெளிக்காட்டி இந்த நினைவுகளை எண்ணி மகிழ்ந்தேன். இனிவரும் காலங்களிலும் இதையே தான் செய்வேன் இனிய ஏழாவது திருமண நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement