தமிழ் சீனிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை தனது காமெடிகளால் மகிழ்வித்து வந்தார். ஆனால் சில பல அரசியில் ஈடுபாட்டல் நீண்ட வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு, மேலும் சில ஆண்டுகள் அரசியில் ரீதியான பல பிரச்னைகளையும் சந்தித்து வந்தார். பின்னர் எப்படியோ அதிலிருந்து மீண்டு வந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு மெர்சல் படத்தில் நடித்து தனது ரீ என்றியை உறுதி செய்தார்.
இடைப்பட்ட காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் ஒரு அப்பாவாக தனது கடமைகளை பார்த்துக்கொண்டுள்ளார் வடிவேலு. தனது மகளான கார்த்திகாவிற்கு 2016 ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கார்த்திகாவிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
தற்போது சிம்பு தேவன் இயக்கி வரும் இம்சை அரசன் 2 பாகத்தில் நடித்து வரும் வடிவேலுவுக்கு இந்த விஷயம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாம். இதனால் தனது சொந்தங்கள் நண்பர்களை அனைவரையும் அழைத்து விருந்து வைத்துள்ளார் வடிவேலு.