வடிவேலுவின் மருமகள் இப்படி பட்டவரா.! பெரிய மனசுதான் நம் நேசமணிக்கு.!

0
2856
vadivelu
- Advertisement -

வைகை புயல் வடிவேலு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் அவரது காமெடிகள் தற்போதும் நிலைத்து நின்றுகொண்டு தான் இருக்கிறது. அதே போல கடந்த சில தினங்களாக வடிவேலு நடித்த நேசமணி என்ற ஹேஷ் டேக்கும் படு ட்ரெண்டிங்கில் இருந்தது.

-விளம்பரம்-

பல கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி பின்னர் தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக உயர்ந்தவர். 2011 தமிழக சட்டசபை தேர்தலில் அவரது ஆப் த பீல்டுக காமெடியால் சற்று ஓரம் கட்டப்பட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடிவேலு தன் மகன் சுப்ரமணிக்கு திருமணம் செய்து வைத்தார். அவரது சொந்த ஊரில் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் உறவினர்களை மட்டும் வைத்து திருமணம் நடத்தினார்.சுப்ரமணிக்கு பார்த்த பெண் பெயர் புவனேஸ்வரி.

Vadivelu

இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊரைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா மரவேலை செய்யும் ஒரு கூலி தொழிலாளி. குடிசை வீட்டில் வசித்து வந்த அவருக்கு தன் மகன் மூலம் நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்திருக்கார் நல்ல உள்ளம் கொண்ட வடிவேலு.பழையதை எப்போது மறக்க கூடாது எனும் ஒரு பண்பு வடிவேலுவிடம் இன்றும் உள்ளது.

-விளம்பரம்-
Advertisement