என் கூட இருந்தவங்க போய் கொரோனா டெஸ்ட் எடுங்க – வீடியோ வெளியிட்ட வாணி ராணி நடிகை.

0
3723
navya
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-
pooja

அந்த வகையில் தற்போது வாணி ராணி சீரியல் புகழ் நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நவ்யா சுவாமி. நவ்யா சுவாமி 1990 மார்ச் 17 ஆம் தேதி கர்நாடகாவின் மைசூரில் பிறந்தவர்.

இதையும் பாருங்க : ஆம்பளைங்களை பார்த்து கூச்சம் இல்லாம கேள்வி கேக்குற நீ ரஜினி பத்தி பேசுற – பார்வதியை கழுவி ஊற்றும் ரஜினி ரசிகர்கள்.

- Advertisement -

இவர் கர்நாடகாவின் மைசூர் ரோட்டரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். பின் கர்நாடகாவிலேயே எம்.எம்.கே மற்றும் எஸ்.டி.எம் மகளிர் கல்லூரியில் பிபிஎம் படிப்பில் சேர்ந்தார். இவர் படிக்கும் போதே கன்னட டிவி சேனலுக்கான ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வானார். பிறகு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

இந்த நிலையில் நடிகை நவ்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எனக்கு கொரோனா இருப்பது உண்மை தான். என்னுடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள், விரைவில் கொரனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒன்றும் அசிங்கப்படும் விஷயம் இல்லை. நான் நலமாக இருக்கிறேன்,விரைவில் குணமடைந்து உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement