இன்னும் அவனுக்கு செஞ்சத பப்லிக்கா சொல்ல முடியாது – பப்பில் தவறாக நடந்தவனுக்கு வரலக்ஷ்மி கற்றுக்கொடுத்துள்ள பாடம்

0
2441
Varalakshmi
- Advertisement -

பப்பில் தன்னிடம் தவறான நடந்து கொண்ட இளைஞனை வரலட்சுமி சரத்குமார் வெளுத்து வாங்கி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலக்ஷ்மி. அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதிலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் , விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் இரவின் நிழல். பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் எதிர்பார்புகளுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

வரலக்ஷ்மி திரைப்பயணம்:

இந்த திரைப்படத்திற்கு பின்னர் வரலக்ஷ்மி நடிப்பில் வெளியாகியிருந்த படம் காட்டேரி. ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து சமந்தா நடிப்பில் வெளியாகியிருந்த படம் யசோதா. இந்த படத்தில் வில்லியாக வரலட்சுமி மிரட்டி இருந்தார். இந்த படத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

varalakshmi

வரலக்ஷ்மி நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து வரலட்சுமி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கொன்றால் பாவம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வரலட்சுமி சரத்குமார் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து கூறியிருந்தது, என்னுடைய அப்பாவிற்கு 20 வயது இருக்கும் என்று நினைக்கிறேன்.

-விளம்பரம்-

வரலக்ஷ்மி அளித்த பேட்டி:

நான் பப்பு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒருவன் என்னுடைய பின் பகுதியில் தட்டினான். அவனுக்கு நேரம் சரியில்லையே என்னவோ தெரியவில்லை? அப்போது அவனுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய நண்பர்கள் அனைவரும் அந்த பையனை பார்த்து அய்யய்யோ இந்த பொண்ண போய் தொட்டு விட்டுட்டயா! அவ்வளவுதான் என்று அந்த பையனை பாவமாக பார்த்தார்கள்.

தவறாக நடந்த நபருக்கு வரலக்ஷ்மி கொடுத்த தண்டனை:

பின் நான் அந்தப் பையனை பிடித்து இழுத்து கீழே போட்டு மிதித்து அவன் மேல் கண்ணாடியை போட்டு உதைத்து ஒரு வழி செய்து விட்டேன். இன்னும் சில விஷயங்களையும் அவனுக்கு நான் செய்தேன். ஆனால், பொதுவெளியில் சொல்ல முடியாது. அந்த சம்பவத்திற்கு பின்னர் அவன் வாழ்க்கையில் இன்னொரு பெண்ணை தொட்டிருக்கவே மாட்டான். ஏன் அவன் பொண்டாட்டிய தொடக்கூட பயந்து இருப்பான். அந்த அளவுக்கு அவனை நான் பின்னி பெடல் எடுத்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement