சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மிக்கு திடீர் நிச்சயதார்தம் நடைபெற்று இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலக்ஷ்மி. அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருந்தார்.
மேலும், இவருடைய நடிப்பில் இந்த கடந்த தமிழில் வி3, கன்னித்தீவு, கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் வீரசிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஏஜென்ட் கோட்டபொம்மாளி போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த படங்கள் எதுவுமே இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெயரை எடுத்து தரவில்லை. அடுத்த வருடம் இவர் பல படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி ஒரு நிலையில் வரலக்ஷ்மிக்கு திடீர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. நிக்கோலை சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி, அதாவது நேற்று நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருக்கின்றனர். வரலக்ஷ்மியை நிச்சயம் முடித்த நிக்கோலை சச்தேவ் ஒரு gallarist , இவர் Gallery 7 என்ற கண்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
வரலக்ஷ்மியையும் நிக்கோலை சச்தேவ்வும் 14 ஆண்டுகள் பழகி வந்துள்ளனர். தற்போது இரு வீட்டார் சம்மத்ததுடன் மீகவும் எளிமையாக நிச்சயதார்தம் முடிந்துள்ளது. மேலும், இவர் திருமணம் இந்த ஆண்டே நடைபெற இருப்பதாவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே வரலக்ஷ்மி விஷாலை காதலிப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. ஆனால், இதனை இருவருமே மறுத்தனர்.
இதனை தொடர்ந்து விஷாலுக்கு அனிஷா என்பருடன் நிச்சயதார்தம் நடைபெற்றது. நிச்சயம் முடிந்து நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தார் விஷால். ஆனால், நிச்சயம் முடிந்து பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இவர்கள் திருமணம் நடைபெறாமல் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.