‘அஜித்தை விட விஜய் தான் No.1’ – சர்ச்சை பேச்சுக்கு வாரிசு தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்.

0
464
- Advertisement -

அஜித் குறித்து பேசியதற்கு மனம் திறந்து வாரிசு பட தயாரிப்பாளர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். இதனை அடுத்து தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

-விளம்பரம்-

வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் மந்தனா, நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் பாடல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

வாரிசு படம்:

இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இதனை அடுத்து வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடலை சிம்பு பாடி இருக்கிறார். முதன் முறையாக விஜய்க்கு சிம்பு குரல் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை 7ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வாங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது.

படத்தின் ரிலீஸ்:

மேலும், படத்திற்கான வியாபாரம் மற்றும் பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவில் திரையரங்கங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

தில் ராஜு அளித்த பேட்டி:

ஆனால், துணிவு படத்திற்கு தான் திரையரங்கங்கள் அதிகமாக கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு மீடியாவிற்கு பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், தமிழகத்தில் நடிகர் அஜித்தை விட விஜய் தான் முன்னிலையில் இருக்கிறார். இது வியாபாரம். இரண்டு படங்களுக்கும் சம எண்ணிக்கையிலான திரையரங்கம் ஒதுக்குவது ஏற்க முடியாது. இது குறித்து நான் உதயநிதி ஸ்டாலின் இடம் பேச போகிறேன் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலரும் கன்னடம் தெரிவித்து வருகிறார்கள்.

விளக்கம் கொடுத்த வாரிசு பட தயாரிப்பாளர்:

இந்த நிலையில் தில்ராஜூ அவர்கள் மீண்டும் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், மீடியா முன்னாடி பேச வேண்டும் என்றாலே பதட்டமாக இருக்கிறது. நான் என்ன பேசினாலும் சர்ச்சை ஏற்படுத்தி விடுகிறார்கள். சமீபத்தில் நான் ஒரு சேனலுக்கு 45 நிமிடம் பேட்டி கொடுத்திருந்தேன். ஆனால், அதிலிருந்து 20 செகண்ட் மட்டும் எடுத்து போட்டு இருக்கிறார்கள். அதற்கு முன்னாடி பின்னாடி என்ன பேசி இருந்தேன் என்ற முழுவதும் தெரியாமல் சமூக வலைத்தளத்தில் வைரல் செய்து விட்டார்கள். அந்த பேட்டியை முழுவதும் பார்த்திருந்தால் நான் என்ன பேசினேன் என்று உங்களுக்கு தெரியும். மீடியாவிடம் நான் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். 20 செகண்ட் வீடியோவை மட்டும் வைத்து முடிவு எடுக்காதீர்கள். ஒருவரை நக்கல் செய்வதிலோ கிண்டல் செய்வதிலோ எனக்கு உடன்பாடில்லை. சினிமாவில் இன்னும் நான் சாதிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு என்று கூறியிருக்கிறார்.

Advertisement