தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அழகும் திறமையும் இருந்த எத்தனையோ நடிகர் நடிகைகள் காணாமல் போயிருக்கிறார்கள். மேலும். அப்படியே அவர்கள் சினிமாவில் நிலைத்து நின்றாலும் அவர்களுக்கு எதிர்பார்த்தபடி அங்கீகாரமும் சினிமா வாய்ப்புகளும் கிடைப்பது கிடையாது .அந்த வகையில் நடிகை சுரபியின் ஒருவர் தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுரபி.
டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தார் அதன்பின்னர் நடிப்புப் பள்ளியில் பயிற்சியும் மேற்கொண்டார் இவரது ஒருசில மாடலிங் புராஜெக்டை கண்டு இவருக்கு இவன் வேற மாதிரி படத்தில் இயக்குனர் சரவணன் கதாநாயகி வாய்ப்பை கொடுத்தார் அந்தப் படத்தில் நடிகை சுரபி நடித்தபோது படத்திற்காக தமிழில் கற்றுக் கொண்டார் என்று இயக்குனர் சரவணன் பாராட்டியிருந்தார் மேலும் அந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதினையும் சிறந்த அறிமுக நடிகை என்ற விஜய் அவார்ட்ஸ் விருதினையும் பெற்றிருந்தார் நடிகை சுரபி
முதல் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய போதும் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் அமையவில்லை. அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் என்ற கதாபாத்திரத்தில் துணை நடிகையாக நடித்து இருந்தார் நடிகை சுரபி. பின்னர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ஜீவா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தோன்றி இருந்தார்.தமிழில் போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் சென்ற சுரபி அங்கே கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு தமிழிலும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பின்னர் தமிழில் புகழ் அடங்காதே போன்ற படங்களில் நடித்தார் சுரபி. ஆனால்ம், இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.தமிழ் படங்களில் மிகவும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த சுரபி மார்க்கெட் குறையவே தெலுங்கில் சற்று கவர்ச்சியை பூட்டினார் இதற்காக அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் கூட நடத்தியிருக்கிறார் சுரபி. மேலும், பட வாய்ப்புகளை பிடிக்க நடிகை சுரபி இபப்டி ஒரு போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.