ரெண்டு புள்ளைக்கு அப்பான்னு என்னாலே நம்ப முடியல -முதல் முறையாக மனம் திறந்த விக்கி.

0
446
vignesh
- Advertisement -

தன்னுடைய இரட்டை மகன்கள் குறித்து முதன்முறையாக விக்னேஷ் சிவன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்து இருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து ஏகே 62 என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே நயன்-விக்கி இருவரும் பல வருடமாக காதலித்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று.

- Advertisement -

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்:

பின் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர். அதன் பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

விக்னேஷ் சிவன்- நயன் இரட்டை குழந்தை:

இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள். இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். ஆனால், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது.

-விளம்பரம்-

வாடகைத் தாய் குழந்தை சர்ச்சை:

இதை DMS மருத்துவத் துறையினர் மூலம் 3 குழு வைத்து விசாரணை நடித்து இருந்தார்கள். அதற்குப் பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் உரிய ஆதாரங்களை மருத்துவரிடம் சமர்ப்பித்து இருந்தார்கள். இதனை அடுத்து அவர்கள் கொடுத்த ஆதாரங்கள் சரியாக இருந்ததால் அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் தொடரவில்லை. தற்போது இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. சமீபத்தில் தான் தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தல தீபாவளி கொண்டாடியிருந்தனர். இந்நிலையில் தன்னுடைய மகன்கள் குறித்து விக்னேஷ் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

மகன்கள் குறித்து விக்கி கூறியது:

அதில் அவர் கூறியிருப்பது, நான் இரண்டு மகன்களுக்கு தந்தை என்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. ஒரு தனி உலகத்தில் இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய குழந்தைகளுடன் நீண்ட நேரம் செலவழிப்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய அதிர்ஷ்டங்களில் ஒன்றுதான் என்னுடைய குழந்தைகள். சமீபத்தில் என்னுடைய மனைவி நயன்தாராவின் பிறந்தநாள் வந்திருந்தது. அப்போது முதல் முறையாக நாங்கள் நான்கு பேர் கொண்ட குடும்பமாக இருந்தது. நயன்தாரா ஒரு நல்ல தாய். அவர் வாழ்க்கையில் திருப்தியுடன், சந்தோஷடனும் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement