எங்கள கூப்பிடுவார்னு தான் நினைச்சோம் – நயன் – விக்கி திருமணத்திற்கு அழைப்பு வராததால் ஆதங்கப்பட்ட பெரியம்மா – உருக்கமாக பேசிய வீடியோ.

0
980
- Advertisement -

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் இன்று கோலாகாலமாக நடைபெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் சிவன் தங்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று விக்னேஷ் சிவனை தூக்கி வளர்த்த அவரின் பெரியம்மா தன் ஆதங்கத்தை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ‘நான் அவனுடைய பெரியம்மா அவனுக்கு இன்று திருமணம் என்று சொன்னார்கள் எப்படி இருந்தாலும் என்னை அவர் கூப்பிடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவன் வரவே இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. கல்யாணத்துக்கு பிறகு இரண்டு பேரும் விருந்திற்கு வந்தால் சந்தோஷப்படுவேன். அதுவும் நடக்குமா இல்லையா என்று தெரியவில்லை.

-விளம்பரம்-

எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று நினைக்கிறேன். கல்யாணத்திற்கு இரண்டு பேரும் செல்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அவனை நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவன் நினைக்கிறானா இல்லையா என்பது தெரியவில்லை. அவன் எப்போது வந்தாலும் அவனை வரவேற்க தயாராக இருக்கிறோம்.அவன் எங்க வீட்டில்தான் வளர்ந்தான் விடுமுறை நாட்களில் அவனுடைய அப்பா எங்கே கூட்டிக்கொண்டு வருவார். நாங்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் அவர் வந்துவிடுவார். நாங்கள் அனைவரும் சுமுகமாக தான் இருந்தோம்.

இதையும் பாருங்க : நயன் திருமணத்திற்கு வராத அஜித்தை பார்க்க காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய நரிக்குறவ சிறுவன். நெகிழிச்சியான வீடியோ.

- Advertisement -

விக்னேஷ் சிவன் பெரியம்மா :

அவன் எங்களை நினைத்து இருக்கா இருக்க மாட்டானா, ஏன் எங்களை அழைக்கவில்லை என்று எங்களால் சொல்ல முடியவில்லை. பெரியவர்கள் தான் பெரியம்மா பெரியப்பா மதிக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் என்ன சொன்னார்களோ தெரியவில்லை. அவன் வரவே இல்லை நான்தான் அவனை அழைத்து சென்று குலாதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைக்கலாம் என்று சொன்னேன். ஆனால் தனியாகவே வந்து பொங்கல் வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்’ என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.

பெரியப்பா அளித்த பேட்டி :

ஏற்கனவே விக்னேஷ் சிவன்- நயன்தராவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் பேசிய அவர் ‘நடிகர் விக்னேஷ் சிவனின் சொந்த ஊர் லால்குடி. சிவக்கொழுந்து மற்றும் மீனாகுமாரி தம்பதிக்கு விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. நான் விக்னேஷ் சிவனின் பெரியப்பா. என் பெயர் மாணிக்கம். எங்களுக்கு குழந்தை இல்லை.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-256.jpg

விக்னேஷ் சிவனை குழந்தை போல வளர்த்தோம் :

ஆகையால் விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் எங்களுடைய சொந்த குழந்தை போல் வளர்த்து இருந்தோம். ஆனால், பணிமாற்றம் காரணமாக விக்னேஷ் சிவனின் தாய், தந்தை இருவரும் கடந்த 1970 களிலேயே சென்னைக்கு வந்துவிட்டனர். அதன்பின் விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கும் எங்க குடும்பத்துக்கும் பெரிதாக தொடர்பு இல்லை.மேலும், விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யா திருமணத்திற்கும் எங்களை அழைக்கவில்லை. ரொம்ப கஷ்டமாக இருந்தது.

எங்கிருந்தாலும் அவன் நலமுடன் வாழ வேண்டும் :

தற்போது விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை திருமணம் செய்யப்போகிறார். இதுவரை எங்களுக்கு எந்தவித அழைப்பும் கொடுக்கவில்லை. இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் விக்னேஷ் சிவன் எங்களது மகன். எங்கிருந்தாலும் அவன் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை என்று விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் வருத்தத்துடன் கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.’

Advertisement