நீண்ட காலமாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.ஆனால் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நயன்தாரா.அப்போது மேடையில் பேசிய அவர் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அம்மா,அப்பா, அண்ணன் அனைவர்க்கும் நன்றி என தெரிவித்தார் மேலும் எனது வெற்றிக்கு காரணமாக இருந்த எனது பையன்ஸி (அதாவது திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் என்று அர்த்தம்) விக்னேஷ் சிவனுக்கு நன்றி என தெரிவித்தார். இதனால் இவைர்கள் திருமணம் செய்துகொள்ளவர்கள் என்று சிறு துடுப்பு மட்டும் கிடைத்தது.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதன் முறையாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதுவரை விக்னேஷ் சிவன் இது மாதிரியான போட்டோ ஷூட்களை எல்லாம் நடத்தியது இல்லை. எனவே நயன்தாரா கூறியது போல ஒரு வேளை இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்களா என்று எண்ணம் தோன்றுகிறது.
சமீபத்தில் ஓரு பிரபல மாத இதழக்காக வித விதமான உடைகளை அணிந்து விக்னேஷ் சிவன் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 'முதன் முறையாக நான் இப்படி போட்டு ஷூட் செய்துள்ளேன்,அதனால் யாரும் தன்னை களாய்க்காமல் இருந்தால் சரி' என்று பதிவிட்டுள்ளார்.




