அம்மா வேலை செய்த பள்ளியில் படிப்பு, விஜய் வாழ்ந்த வீடு இப்போ எப்படி இருக்கு பாருங்க – வைரலாகும் வீடியோ.

0
1959
vijay
- Advertisement -

தளபதி விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் வாழ்ந்த பூர்வீக ஊர், வீடு குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக கொடிகட்டி பறந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இவர் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் பணியாற்றி வருகிறார். கடைசியாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கிய 70 வது திரைப்படம் “கேப்மாரி”. இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, விபின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : விக்ரம், விஜய் சேதுபதி ரோலில் முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த இரண்டு நடிகர்கள் தானாம். (செட் ஆகி இருக்கும்னு நினைக்கிறீங்க ? )

- Advertisement -

எஸ் ஏ சந்திரசேகரின் கடைசி படம்:

இந்த படம் இன்றைய இளைஞர்கள் செய்யும் அட்டூழியங்களையும், போடும் ஆட்டங்களையும் வெட்ட வெளிச்சமாக சுட்டிக்காட்டி, அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவான கதை. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை. அதற்கு பிறகு இவர் எந்த படத்தையும் இயக்க வில்லை. பின் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கி இருக்கிறார். அதில் அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பற்றி பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

விஜய்யின் புகழுக்கு காரணம்:

அதோடு தற்போது சினிமா உலகில் முடிசூடா மன்னனாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் தான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் அவர்கள் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

விஜய் திரைப்பயணம்:

தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இப்படி எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய் மட்டுமில்லாமல் பல கலைஞர்களையும் உருவாக்கி இருக்கிறார். இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் பிறந்து வாழ்ந்த ஊர் குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ராமாபுரம் மாவட்டத்திலுள்ள காமன்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் எஸ் ஏ சந்திரசேகர்.

எஸ் ஏ சந்திரசேகர் பிறந்த ஊர்:

இவரின் தாய் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து இருந்தார். பிற்காலத்தில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இந்த அரசு பள்ளிக்கு நிறைய நன்கொடை கொடுத்திருக்கிறார். தற்போது இவர் மாடமாளிகை கோபுரத்தில் வாழ்ந்தாலும் சிறுவயதில் ஓட்டு வீட்டில் வாழ்ந்தவர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னாடி அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து மேடை போட்டு பேசியிருக்கிறார். பின் தன் வாழ்ந்த வீட்டை பார்த்து தயவு செய்து இந்த வீடுகளை இடிக்காதீர்கள். இது என்னுடைய கடந்த கால நினைவுகள். இப்படியே இருக்கட்டும் என்று சொல்லி இருக்கிறார்.

Advertisement