தமிழகத்தை உலுக்கிய பாண்டிச்சேரி சம்பவம் – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்.

0
626
- Advertisement -

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை கொலை செய்திருக்கும் சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கை தான் தற்போது சோசியல் மீடியாவில் வைராக்கப்பட்டு வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள சோலை நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நாராயணன்- மைதிலி தம்பதியினர். இவர்களுக்கு 9 வயதில் ஆர்த்தி என்ற மகள் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 2ம் தேதி தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் போது மாயமாகி இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் தன் மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

நான்கு நாட்கள் ஆகியும் ஆர்த்தி கிடைக்கவில்லை. பின் ஒரு கால்வாயில் சாக்கு முட்டையில் சடலமாக ஆர்த்தி என்ற சிறுமி கிடைத்து இருக்கிறார். இதனை அடுத்து போலீசார் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்டு தெள்ளத்தெளிவாக தெரிந்திருக்கிறது. பின் போலீஸ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், இது சம்பந்தமாக போலீஸ் குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறார்கள். அந்த ஏரியாவில் கஞ்சா குடிக்கும் 19 வயது இளைஞனும், 58 வயது கொண்ட முதியவரும் சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். பின் விசாரணையில், அந்த இளைஞர் சிறுமிக்கு மொட்டை மாடியில் பாலியல் தொல்லை கொடுத்த போது அதை பார்த்த முதியவரும் தன்னுடன் சேர்ந்து கொண்டதாகவும் சிறுமி மிகவும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் அடித்த அடியில் அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார். இதை அறிந்த ஊர் மக்கள் குற்றவாளிகளைதங்களிடம் ஒப்படைக்க சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

தற்போது இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் நெஞ்சை பதற வைத்து இருக்கிறது. இது குறித்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், புதுச்சேரி முந்தியால் பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.

பெற்ற மகளை இழந்து பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்கு எனது கனத்த இதயத்துடன் ஆறுதலை சொல்ல கடமை பட்டு உள்ளேன். சிறுமியை மிருகத்தனமாக, ஈவிரக்கம் இன்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனையை பெற்று தர புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். தற்போது விஜய் வெளியீட்டிருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது

Advertisement