இயக்குஞர் எஸ்.ஜே.சூர்யா வாலி, குஷி என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை அஜீத்தை வைத்தும்,விஜயை வைத்தும் இயக்கியவர்.
பின்னர் ஏதோ சில காரணங்களால் தொடர்ந்து படம் இயக்காமல் அதன்பிறகு விலகியிருந்தார். பின்னர் பல படங்களில் தன்னைத்தானே இயக்கிக்கொண்டார். ஆனால் இசை படத்திற்கு பிறகு இயக்கத்தை தள்ளி வைத்து விட்டு முழுநேர நடிகராகி விட்டார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனை தொடர்ப்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாகியிருக்கிறார்.ஸ்பைடர் அடுத்தவாரம் பல மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.அடுத்த மாதம் தீபாவளிக்கு தமிழில் விஜய் நடித்து வெளிவரவுள்ள மெர்சல் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
படத்தில் கதாபாத்திரமாக முழுமையாக மாறி நடித்துள்ளார். படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் அறிமுக காட்சிக்கு மட்டும் 50இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம்.எஸ்.ஜே.சூர்யா–விஜய் இடையேயான கிளைமாக்ஸ் காட்சியை ஐந்து நாட்களாக படமாக்கியுள்ளார் அட்லீ.அத்தனை நாளும் கொஞ்சம்கூட எனர்ஜி குறையாமல் நடித்தாராம் எஸ்.ஜே.சூர்யா.
இதையும் படிங்க: மெர்சலுக்கு தமிழ் ராக்கர்ஸ் விடும் சவால்.!
அதைப்பார்த்து அசந்து போன விஜய், ஸ்பாட்டில் அனைவர் முன்னிலையிலும் எஸ்.ஜே.சூர்யாவை மனதார பாராட்டியிருக்கிறார்.இளையதளபதி பாராட்டியதால் வில்லன் எஸ்.ஜே.சூர்யா படுசந்தோசமாக உள்ளாராம்.