பிகில் படத்திற்காக கிரேனில் கொக்கி மாட்டி தொங்கியும், மண்சோறு சாப்பிடும் ரசிகர்கள்..வைரல் வீடியோ..

0
3371
Bigil
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக விளங்கி வரும் நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. இவருக்கு இருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இவருக்காக எந்த எல்லைக்கே வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது இந்த சம்பவம். நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை, அதாவது 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

பொதுவாக விஜய் படம் வந்தால் அது அவரது ரசிகர்களுக்கு ஒரு திருவிழாதான் அதுவும் தீபாவளி போன்ற ஒரு திருநாளில் வந்தால் சொல்லவா வேண்டும்.மேலும் விஜய் ரசிகர்கள் விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று பலமுறை நிரூபித்திருக்கிறார்கள். அதில் ஒரு சில ரசிகர்கள் ஆக்கப் பூர்வமான விஷயங்களை செய்து வந்தாலும், ஒரு சில ரசிகர்கள் இன்னமும் திருந்தாமல் முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிகில் படத்திற்காக ரசிகர்கள் சிலர் தங்களது முதுகில் கொக்கியை மாட்டி கொண்டு அந்தரத்தில் தொங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

இது ஒருபுறமிருக்க நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்றும் விஜய் நீடோடி வாழ வேண்டும் என்றும் விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டுள்ளார்கள். மேலும், பிகில் படத்தை ஆவலுடன் எதிர் பார்த்து வருவதாகவும், தங்கள் பிரார்த்தனை நிறைவேறி பிகில் திரைப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றியடையும் என்றும் மண் சோறு சாப்பிட்டவர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு ரசிகர்கள் அத்தான் இருக்கு அண்டாவில் பால் அபிஷேகம் செய்திருந்தனர். இதேபோல செக்க சிவந்த வானம் படத்தின் போது ரசிகர் ஒருவர் கிரேனில் தொங்கியபடி ஊர்வலம் வந்தார். அப்போது கிரேனில் இருந்து கொக்கி அறுந்து விழுந்து அந்த நபர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். மேலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் சாலை நடுவில் இருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் தனது படங்களுக்கு பேனர்களை வைப்பதற்கு பதிலாக ஏதாவது நல்ல செயல்களை செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், சமூகவலைதளத்தில் உருவாக்கும் ஹேஷ் டேக்குகளை பயனுள்ளதாக உருவாக்கங்கள் என்றும் கூறியிருந்தார். விஜய்யின் இந்த பேச்சை கேட்டு ரசிகர்கள் ஒரு சிலர் தங்களது அன்பினை ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்து வெளி காட்டி வருகின்றனர். “பிகில்” திரைப்படத்தை முன்னிட்டு , கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டுமென விரும்பி நெல்லை விஜய் நற்பணி இயக்க நிர்வாகிகள் நெல்லை ஐபி எஸ் அதிகாரியை அணிகியுள்ளனர். மேலும், காவல்துறை ஆலோசனை ஏற்று நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 CCTV மற்றும் மானிட்டர் அமைத்து கொடுத்தனர். விஜய் ரசிகர்களின் இந்த செயலை பாராட்டி நெல்லை ஐபிஎஸ் அதிகாரி தனது முகநூல் பாகத்திலும் பதிவிட்டிருந்தார்.

ஆனால், இதுபோன்ற ரசிகர்கள் சிலர் இன்னமும் பயன் இல்லாமல் இப்படி பொறுப்பில்லாமல் செய்யும் சில செயல்களால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் தற்போது கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்கள். ஆனால், இது போன்ற காரியங்களில் ஈடுபடும் ரசிகர்களை விஜய் வெறியர்கள் என்று சொல்வதா இல்லை வேறு ஏதாவது சொல்வதா என்று தான் தெரியவில்லை. மேலும், இது போன்ற ரசிகர்களுக்கு விஜய் ஏதாவது அறிவுரை கூறி அறிக்கையாவது வெளியிட்டாள் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

Advertisement