என் வீட்டு கன்னுகுட்டி என்னோட மல்லு கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி – மீம் மெட்டிரியலாக மாறிய விஜய் வீட்டு பஞ்சாயத்து.

0
1823
vijay
- Advertisement -

தன் அம்மா மற்றும் அப்பா மீதே விஜய் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய்யை பலர் கேலி செய்து வருகின்றனர். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 முதல் 9-ஆம் தேதி என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அக்டோபர் 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு கடந்த 15-ம் தேதியிலிருந்து தொடங்கிவிட்டது.

-விளம்பரம்-

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் செப்டம்பர் 22ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவித்து இருந்தது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே 13 ஆயிரத்துக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.தற்போது தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இதையும் பாருங்க : பல ஐட்டம் பாட்டில் கலக்கிய முமைத்தை ஞாகபம் இருக்கா – கண்ணாடி முன் உள்ளாடை தெரியும் வகையில் கொடுத்துள்ள போஸ்.

- Advertisement -

அதிமுக கூட்டணியில் பாஜக –அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. இதற்கிடையில் இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. ந

டிகர் விஜய் மக்கள் இயக்கம் மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மொத்தம் 20 மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றனர். விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும். ஆனால், நடிகர் விஜயின் பெயரை மக்கள் இயக்கம் பயன்படுத்தாமல் சுயேச்சையாக போட்டியிடும் என்று நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

-விளம்பரம்-

உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 120 பேர் சுய போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தனது பெயரையோ தனது ரசிகர் மன்றத்தின் பெயரையே பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 பேர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதனால் விஜய், எஸ் ஏ சியிடம் பேசுவது இல்லை. ஆனால், தற்போது தன் அம்மா மீதும் விஜய் வழக்கு தொடர்ந்து உள்ளது சமூக வலைதளத்தில் பெரும் பேசும் பொருளாகி இருக்கிறது.

Advertisement