இந்த நிகழ்ச்சியை என் மகன் கண்டிப்பா பார்ப்பான் – விஜய் டிவி ஷோவில் பேசிய விஜய்யின் அம்மா ஷோபா.

0
648
vijay
- Advertisement -

சமீப காலமாக ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமாக போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் சீரியல்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. சீரியல்களுக்கு மட்டும் இல்லாமல் அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள். அந்த வகையில் சின்னத்திரை தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

-விளம்பரம்-

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார். ஆனால், திடீர்என்று இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார். இதுகுறித்து பதிவில் ரக்ஷிதா கூறியது, நான் சீரியலில் இல்லை என்பது உங்களில் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், சில சூழ்நிலை காரணத்தினால் தான் என்னால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது. அதனால் தயவு செய்து இந்த முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏமாற்றம் தந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்.

- Advertisement -

விஜய் டிவியில் இருந்து விலகிய ரக்ஷிதா:

எனக்கு வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், பல நேரங்களில் மதிப்பற்றவளாக நான் உணர்ந்தேன். இந்தத் தொடரில் எனக்கு மதிப்பில்லை என்பதை உணர்ந்து தான் இந்தத் தொடரில் இனி நடிக்க வேண்டாம் என்று கூறி இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை என்ற புது சீரியலில் நடித்து வருகிறார். திருமணமாகி கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் ஒரு பெண் வாழ முடியாதா? திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியாதா? என்ற கண்ணோட்டத்தில் இந்த சீரியலின் கதை அமைந்திருக்கிறது.

ரக்ஷிதா நடிக்கும் புது சீரியல்:

பெண்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமூகத்தின் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த கதை அமைந்துள்ளது. மேலும், இந்த சீரியலில் கதாநாயகியாக ரக்ஷிதா நடிக்கிறார். தன் கணவனை இழந்து இரண்டு குழந்தைகளோடு பல போராட்டங்களை சந்தித்து வாழும் பெண்ணின் கதை. இதனை தொடர்ந்து சீரியலில் நாயகனாக ஆபீஸ் சீரியல் நடிகர் விஷ்ணு நடிக்கிறார். தற்போது இது சொல்ல மறந்த கதை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

ரக்ஷிதா அளித்த பேட்டி:

இருந்தாலும், ரக்ஷிதா விஜய் தொலைக்காட்சியை விட்டு கலர்ஸ்-தமிழ் தொலைக்காட்சிக்கு சென்றது குறித்து சோசியல் மீடியாவில் பல விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியை விட்டு விலகியதற்கான காரணத்தை ரக்ஷிதா முதன் முறையாக பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஆர்ட்டிஸ்டாக நல்ல ஆபர் கிடைக்கும் போது வேறு சேனலுக்கு சென்றுவிடுவார்கள். யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையில் சோசியல் மீடியா உள்ளது.

வேறு சேனல் குறித்து மேனேஜர் சொன்னது:

வளர்ந்த சேனல்களில் தொடர்ந்து நடிக்க வேண்டுமென்றால் வளர்ந்துவரும் சேனல்களுக்கு யார் கைகொடுப்பது? நான் ஒரு நடிகை அதிக சம்பளம் மற்றும் நல்ல கதாபாத்திரம் கிடைத்ததால் தான் மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு மேனேஜர் கூட என்னை அழைத்து வேறு சேனலுக்கு சென்றால் உங்களின் பெயர் கெட்டுப் போய்விடும் என்றார். பெயர் கெட்டு போகும் அளவுக்கு அங்கு சென்று நான் என்ன செய்யப் போகிறேன் என்று நான் அந்த மேனேஜரின் கருத்துக்கு கேள்வி கேட்டேன். அதற்கு அவர் உங்களுக்கு ஓகே என்றால் நடியுங்கள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார் என்று ரக்ஷிதா கூறியிருக்கிறார்.

Advertisement