நான் மட்டும் நிஜத்தில் முதலமைச்சர் ஆனால்..? தளபதி விஜய் அனல் பறக்கும் பேச்சு.!

0
1111
Vijay-sarkar
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், ராதாரவி, கீர்த்தி சுரேஷ்,வரலக்ஷ்மி சரத் குமார், ஏ ஆர் ரகுமான் ஆகியோர் பங்குபெற்றனர்.

-விளம்பரம்-

sarkar

- Advertisement -

இசை வெளியிட்டு விழாவை போல அல்லாமல் விஜய்க்கு நடத்தபட்டு வரும் பாராட்டு விழா போலவே இருந்து வருகிறது. இந்த விழாவில் ரசிகர்கள் அனைவரும் ‘தளபதி தளபதி ‘ என்று ஆர்ப்பரிக்க மேடைக்கு வந்தார் நடிகர் விஜய். விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் அவரது பேச்சை கேட்க ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கு, ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்று விஜய் கூற ஆரம்பித்தும் அரங்கமே அதிர்ந்தது.

பின்னர் பேசிய விஜய், ரொம்ப நாள் ஆச்சி ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்று கூறி அதனால் ஆசையாக இருந்தது அதான் சொல்லி பார்த்தேன். என்னுடைய படங்களின் வெற்றியின் போது எவ்வளவு சந்தோசம் அடைவேனோ அந்த அளவிற்கு உங்களை இது போன்ற நிகழ்ச்சியில் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

-விளம்பரம்-

Sarkar

மேலும்,இந்த படத்தை பற்றி அவர் பேசுகையில், மெர்சல் படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. இதில் அரசியலில் மெர்சல் செய்திருக்கிறார் என்று கூறினார். மேலும், தேர்தலில் போட்டியிட்டு பிரச்சாரம் செய்து ஜெய்த்து பின்னர் தான் சர்கார் அமைப்பார்கள். ஆனால், நாங்கள் சர்கார் அமைத்து பின்னர் தேர்தலில் போட்டி இடப்போகிறோம் என்று கூறியதும் ரசிகர்கள் அனைவரும் ஆர்பரிக்கா , படத்தில சொன்னங்க என்று சிரித்துவிடுகிறார்.

பின்னர் புடித்திருந்தால் படத்திற்கு வோட் போடுங்கள் என்று கூறுகிறார். பின்னர் நடிகர் பிரசன்னா, விஜய்யிடம் பொதுவாக உங்க படத்தின் டைட்டில் வைக்கும் போதே பிரச்சனை வந்து விடுகிறது. அதிலும் இந்த படதிற்கு சர்க்கார் என்று வேறு டைட்டில் வைத்துள்ளீர்கள். அதே போல நீங்கள் இந்த படத்தில் முதலைச்சராக வருகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த நடிகர் விஜய், நான் முதல்வராகவெல்லாம் நடிக்கவில்லை என்று கூறுகிறார். அதன் பின்னர் நடிகர் பிரசன்னா, படத்தில் முதலமைச்சராக நடிக்கவில்லை ஒருவேளை நிஜத்தில் முதலமைச்சராக ஆனால் என்ன செய்வீர்கள் என்று கேட்க, அதற்கு விஜய் நிஜத்தில் முதலமைச்சரானால் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் உண்மையாக இருப்பேன் என்று கூறுகிறார்.

பின்னர் நடிகர் பிரசன்னா, ஒருவேளை அனைவரும் உங்களை அழைக்கும் காலம் வரும் அப்போது நீங்கள் முதலமைச்சரனால் நீங்கள் முதலில் என்ன விஷத்தை மாற்றுவீர்கள் என்று கேட்கிறார். அதற்கு விஜய் ‘நீங்கள் கற்பனையாக கேட்கிறீர்கள் அதானே, நான் வந்தால் முதலில் ஊழல், லஞ்சம் இவை அனைத்தையும் ஒழிப்பேன்.ஆனால் அதனை ஒழிப்பது என்பது ஈஸியான வேலை இல்லை ஏனெனில் நமது அனைவரது வாழ்விலும் அது வைரஸ் போல பரவி இருக்கிறது. இதை முழுமையாக ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் ஒழித்து தான் ஆக வேண்டும் என்று கூறுகிறார் விஜய்.

பின்னர் ஒரு குட்டி கதை ஒன்றை கூறிவிட்டு பின்னர் பேசிய விஜய், நான் இதை சொல்கிறேன் என்று யாரும் கோபித்துகொள்ள வேண்டாம் நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, ஒரு இடத்தில் மேல் மட்டத்தில் இருக்கும் ஆட்கள் ஒழுங்காக இருந்தால் கீழ் மட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் ஒரு பயம் வரும் (எட்ப்பாடியை சொல்கிறார் என்று தோன்றுகிறது அல்லவா). இங்கு இறப்பு சான்றிதழ் வாங்ககூட காசு தான், ஒரு மன்னர் நன்றாக இருந்தால், ஒரு தலைவர் நல்ல ஆட்சியை செய்தால் தானாகவே ஒரு கட்சி நல்ல கட்சியாக மாறிவிடும் என்று கூறினார் விஜய்.

Vijay

விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய்யின் அதிகம் அரசியலும் கலந்தே இருந்தது என்று கூறலாம்.

Advertisement