ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்ட விஜய். ட்ரெண்டிங்கில் வந்த ஹேஷ்டேக்.

0
2950
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடி சூடா மன்னனாக பட்டைய கிளப்பி கொண்டு வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் படம் “மாஸ்டர்”. மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் அவர்களை வருமான துறையினர் சோதனைக்காக அழைத்து சென்றார்கள். இது சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இதனை தொடர்ந்து விஜய் அவர்களின் வீட்டில் எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தது. இந்த பிரச்சினை ஒரு வழியாக சுமுகமாக முடிவடைந்தது. பின்னர் மீண்டும் மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பு நெய்வேலியில் தொடங்கியது.

- Advertisement -

உடனே பாஜகவினர் இந்த இடத்தில் படப்பிடிப்பு நடக்க கூடாது என்று போராட்டம் செய்து வந்தனர். இதனால் விஜய்க்கு ஆதரவாக நின்ற ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தற்போது இந்த நிலைமை சரியாகி உள்ளது. இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்திக்க விஜய் அவர்கள் வேன் மீது ஏறி உள்ளார்.

பின்னர் விஜய் அவர்கள் கூலிங் கிளாஸை போட்டு கொண்டு ஒரு நிமிஷம் என்று சைகை காட்டி விட்டு செல்ஃபீ எடுத்துக் கொண்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி படு வைரலானது . தற்போது தளபதி விஜய் அவர்கள் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். இதை ரசிகர்கள் #ThalapathyVijaySelfie என்ற ஹேர்டேக் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த ஹேர்டேக் சோசியல் மீடியாவில் பயங்கர டிரெண்டிங்காக போய்க் கொண்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement