ரசிகருக்கு கையை கொடுத்திட்டு டெட்டால் போட்டு கழுவினத நானே பாத்திருக்கேன்..

0
7447
Vijay-sami
- Advertisement -

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. நடிப்பையும் தாண்டி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். அதேபோல கடந்த சில ஆண்டுகளாகவே தனது படத்தின் விழாக்களில் விஜய் பல்வேறு அரசியல் கருத்துக்களை பேசி தான் விரைவில் அரசியலுக்கு வருவதை சூசகமாக குறிவந்துகொண்டே இருக்கிறார். விஜய்யின் மறைமுகமான இந்த அரசியல் பேச்சுக்கள் பல்வேறு அரசியல்வாதிகள் மத்தியில் கடுமையாக விமர்சனமாக மாறியுள்ளது. இந்த நிலையில் விஜய் பற்றி தமிழில் சர்ச்சை படங்களை இயக்கிய இயக்குனர் சாமி பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
https://www.youtube.com/watch?v=grKWpNcxeO8&feature=youtu.be

அந்த வீடியோவில் பேசியுள்ள அவர். நான் தான் சிந்து சமவெளி, உயிர், கங்காரு போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய சாமி. நான் உங்களுக்கு ‘அன்றில் பறவைகள்’ என்ற அழகான குடும்ப கதை ஒன்றை சொல்ல வந்தேன். அதை நீங்கள் செல்வபாரதி இயக்கத்தில் எடுத்த ‘பிரியமானவளே’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது கேட்டீர்கள். ஆனால், பரவா இல்லை சினிமாவில் பொறுத்த வரை என்ன வேண்டும் என்றாலும் நடக்கும். (அந்த படத்தில் விஜய் நடிக்கவில்லை என்றதால் பரவாயில்லை என்று குறிப்பிட்டுள்ளார்)

இதையும் பாருங்க : முகம் சுழிக்கும் வகையில் சாண்டி செய்த செயல்.. சர்ச்சையை ஏற்படுத்திய கவினின் பதிவு..

- Advertisement -

ஆனால், ஒரு விஷயம் நீங்கள் ரஜினி சார் மாதிரி நடிசிட்டு மட்டும் போங்க வாயை திறந்து தயவு செய்து பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பேசுவதனால் நீங்கள் உங்களுக்கே ஆப்பு வைத்து கொள்கிறீர்கள். நீங்கள் பீகிள் இசை வெளியீட்டு விழாவில் பேசுகிறீரகள், யார் யாரை எங்கு வைக்கணுமே அங்கு வைக்க வேண்டும் என்று. அப்படி என்றால் உங்களை கடவுள் வைக்க வேண்டுமே அங்கே தான் வைத்திருக்கிறார். உண்மையாக கடவுளும், இந்த இயற்கையும் யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைத்துள்ளது. நீங்கள் இப்படி பேசுவது மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் என்பது உங்களுக்கு தெரியும். சினிமாவில் அல்ல உங்களது நிஜ வாழ்வில் எப்படிபட்ட நடிகர் என்பது உங்களுக்கு தெரியும்.

Related image

ரசிகர்களை அடிக்கடி சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறீர்கள். மேலும், ரசிகர்கள் தான் என் நெஞ்சில் குடியிருக்கும் தெய்வங்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால்,அதே ரசிகர்களுக்கு கை கொடுத்து விட்டு அவர்களிடம் புகைப்படமும் எடுத்துக் கொண்டு உள்ளே சென்று டெட்டால் போட்டு கையை கழுவியதை நானே கண்டிருக்கிறேன். இதுதான் உங்களுடைய உண்மையான நடிப்பு. இரண்டாவதாக நீங்கள் எந்த விதத்தில் 50 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ஏனெனில் ஒரு அறுபது நாள் நடித்துவிட்டு 50 கோடி சம்பளம் வாங்குகிற்றீர்கள். சம்பளம் பேசி விட்டு அதனை கருப்பு பணமாக வாங்கிக் கொண்டு வீட்டின் பின்புறமாக அந்த பணத்தை அளித்து ஏதாவது சொத்துக்களை வாங்கி விட்டீர்கள். இதுதானே நீங்கள் செய்கிறீர்கள். இதில் எங்கே உங்களுக்கு நேர்மை இருக்கிறது இங்கே உங்களுடன் உண்மை இருக்கிறது.

-விளம்பரம்-

நீங்கள் எதற்காக இதுபோன்ற மேடைகளில் பொய்யான கருத்துக்களை சொல்கிறீர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு உங்கள் தந்தை எஸ் ஏ சி வேறு. அனைவரும் பேசுவதை தான் விஜய் பேசுகிறார் என்று கூறுகிறார். இன்னும் எத்தனை நாட்கள் தமிழர்களை நீங்கள் ஏன் மாற்றுகிறீர்கள். தயவு செய்து படத்தில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேடைகளில் சென்று பேசுவது, கருத்து சொல்வது சொல்வதற்கு உங்களைவிட பெரிய பெரிய ஆட்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் என்று மிகவும் ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

Advertisement